Sunday, September 5, 2010

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

Posted by கருந்தேள் கண்ணாயிரம் On 11:57 PM 312 comments

panchathanthiram    picverybadthings

 


முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான்.


தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில படங்களின் ஊடாகவே அறிந்து கொள்ள முடிகிற ஒரு அவதானிப்பு என்னவெனில், கமல்ஹாஸனின் படங்களைத் தவிர்க்கவே முடியாது என்பதைத்தான். பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களைக் கவனிக்கும் யாராகினும், தமிழ்ப்படங்களில், கமலின் படங்கள் மிகவும் வித்யாசமானவை என்றும், தமிழ்ப் படங்களை, கமல்ஹாஸனின் படங்கள் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன என்றும் ஒரு முடிவுக்கு வருவதை வெகு எளிதாகக் காண முடியும். கமல்ஹாஸனுமே, தனது படங்கள் அப்படிப்பட்ட நோக்கில் எடுக்கப்படுபவைதான் என்று பல பேட்டிகளில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.


ரசிகர்களாகிய நாமுமே, கமல்ஹாஸனின் படங்களை ஒரு கலை நோக்குடனே பாவித்து வந்திருக்கிறோம். கமல் படங்கள் என்றால், அவை முற்றிலும் வணிக நோக்குடன் எடுக்கப்படாமல், ஓரளவுக்கேனும் மாற்று சினிமாவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன என்னும் ஒரு தகவல், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் சினிமா ரசிகர்களிடையே பரப்பப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது. மீடியாவுமே இப்படித்தான் கமலின் படங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது.


ஆனால்….. (இது ஒரு பெரிய ‘ஆனால்’)…


இவை அத்தனைக்கும் கமல் தகுதியுடையவரா?


சுற்றி வளைக்காமல், நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன்.  கமல்ஹாஸனின் முக்கியப் படங்கள் என்று அழைக்கப்பட்டுவரும் படங்கள் எல்லாமே, ஆங்கில மற்றும் உலகப் படங்களின் ஈயடிச்சாங்காப்பி என்பது எனது வாதம்.


இருங்கள். . . கமல் ரசிகர்கள் பொங்கியெழுமுன், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். எனது நோக்கம், கமலைப் பழிப்பதோ அல்லது அவர் மீது அவதூறு சுமத்துவதோ இல்லை. அதற்கு எனக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், சிலகாலமாகவே, தமிழ்த் திரையுலகில் காப்பி அடிப்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான், அதை முதன்முதலில் பெருவாரியாக ஆரம்பித்து வைத்த நபரைப் பற்றி எழுதினால்தான் பொருத்தம் என்பதால், இக்கட்டுரையை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் மூல காரணம்.


இன்னொரு காரணம் – சில வாரங்கள் முன், ராவணன் வெளிவந்த சமயம், மணிரத்னத்தைத் தமிழ் வலையுலகம் போட்டுத் தாளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் – மணிரத்னம் உலகப் படங்களைச் சுடுகிறார் என்பது. அது உண்மைதான். ஆனால், கமல் அளவு காப்பியடித்தது யாரும் இல்லை என்பதே உண்மை. ஆகவேதான் இக்கட்டுரை.


நான் அவசரப்பட்டு இதைக் கூறவில்லை. இதோ கட்டுரையின் முக்கிய பாகத்தில் அந்த ஆதாரங்களைப் பார்க்கலாம்.


ராஜபார்வை –
கமலின் முக்கியப் படமாகக் கருதப்படுகிறது. அவரது நூறாவது படமும் கூட. கமர்ஷியல் படங்களிலிருந்து விலகி, தரமான படங்களைக் கமல் கொடுக்க ஆரம்பித்ததற்கு இது ஒரு தொடக்கமாகக் கருதப்படுகிறது. படத்தின் கதை, ஒரு குருட்டு வயலினிஸ்ட் பற்றியது. அவனுக்கு அறிமுகமாகும் ஒரு துடிப்பான பெண், அவனது வாழ்க்கையில் கொண்டுவரும் மகிழ்ச்சி.. இப்படிச் செல்கிறது கதை. மிகப்பலரால் பாராட்டப்பெற்ற ஒரு படம் இது.


சரி. இப்பொழுது, Butterflies are Free (1972) என்ற படத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். டான் பேக்கர் என்பவன், சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் வாழும், பிறவியிலேயே பார்வையிழந்த நபர். அவனது வீட்டு ஓனரின் மகள், அவனது வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஊட்டி, அதன்பின் அவனைப் பிரிந்து சென்றுவிடுகிறாள். அதன்பின், அவனுக்கு அறிமுகமாகும் மற்றொரு பெண், அவன் குருடன் என்றே அறிந்துகொள்ளாமல், அவனுடன் பழகுகிறாள். தனது சிகரெட்டின் சாம்பலை மேஜை மீது அவன் உதிர்க்கும் ஒரு தருணத்தில் தான் அவன் குருடன் என்று அறிந்துகொள்கிறாள். அதன்பின் இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படம்.  இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த டான் பேக்கர், ஒரு இசைக்கலைஞனாக ஆக முயற்சிப்பதுதான்.


இரண்டு படங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பார்த்தால் கூட, ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்டதுதான் ராஜபார்வை என்று புரிந்துகொள்ள முடியும். இதில் வேறு, ராஜபார்வையின் ‘கதை’ என்று கமலின் பெயர் இருக்கும்.


அதேபோல், ‘The Graduate' (1967) படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் கிளைமேக்ஸை, ராஜபார்வையின் கிளைமேக்ஸுடன் சற்றே ஒப்பிட்டால்கூட, மிக எளிதாக, ராஜபார்வையின் க்ளைமேக்ஸ் காப்பியடிக்கப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம்.


இதில் ஆரம்பித்த கமலின் காப்பி சரித்திரம், எப்படித் தொடர்கிறது என்று பார்க்கலாம்.


எனக்குள் ஒருவன்  –
கமல்ஹாஸனின் குரு என்று அவராலேயே குறிப்பிடப்பெறுபவர் , கே. பாலசந்தர். இவருக்கு, ’இயக்குநர் சிகரம்’ என்று ஒரு பட்டம் இருப்பது தெரிந்ததே. ஆனால், இந்த பாலசந்தர், இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ரித்விக் கட்டக்கின் ‘மேகே தக்க தாரா’ படத்தை மொத்தமாக அட்டைக்காப்பி அடித்து, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தை எடுத்து, படத்தின் அத்தனை புகழையும் தனக்கே உரியதாகக் காட்டிக்கொண்டது பல நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இதைப்பற்றிய எனது பழைய பதிவைப் படித்துப் பாருங்கள்.


பாலசந்தர் தயாரிக்க, கமல் நடித்த படமே ‘எனக்குள் ஒருவன்’. படத்தின் கதை: சென்னையில் வாழ்ந்துவரும் ஒரு டிஸ்கோ நடனக்கலைஞனுக்கு, திடீரென பூர்வஜென்ம நினைவு வந்துவிடுகிறது. அதனையடுத்து, பூர்வஜென்மத்தில் தான் வாழ்ந்த இடத்துக்குச் சென்று, தனது பூர்வஜென்ம வாழ்க்கையில் சம்மந்தப்பட்டிருப்பவர்களிடம் பேசி, தனது மரணத்துக்குக் காரணமானவர்களை வெளிப்படுத்துவதே இதன் கதை.


இப்போது, ’The Reincarnation of Peter Proud (1975) என்ற ஆங்கிலப்படம்.  இதிலும், ஹீரோவுக்கு போனஜென்ம நினைவுகள் பொங்கி வருவதால், அந்த நிகழ்வுகள் நடந்த இடத்துக்கு அவன் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் ஒரு பெண்ணின் போன ஜென்மக் கணவன் தான் இந்தப் பீட்டர் ப்ரௌட் என்பது தெரிகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படம்.


இதுதான் எனக்குள் ஒருவனின் கதை என்பது மேலே கொடுத்துள்ள சுருக்கத்தைப் படித்தாலேயே தெரியும்.


இந்திரன் சந்திரன் –
கமல் நடித்த நகைச்சுவைப் படம். மேயராக ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு சாதாரண ஆளின் கதை.


’Moon Over Parador (1988)
என்ற ஆங்கிலப்படத்தின் கதையைக் கவனியுங்கள். ஒரு ஊரில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜாக், அந்த ஊரின் ஜனாதிபதி திடீரென்று இறந்துவிடுவதால், அந்த ஜனாதிபதியின் முக்கிய அடியாளால் அழைக்கப்பட்டு, ஜனாதிபதி போல் வேடம் போட்டு, அதன்பின் மக்களாலேயே நம்பப்பட்டு, இறந்த ஜனாதிபதியின் மனைவியே இவனை நம்பும் அளவு போய், அதன்பின் இந்த சிக்கலிலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதே படம்.


இந்திரன் சந்திரன், இந்த மூன் ஓவர் பேரடார் படத்தின் காப்பியா இல்லையா?


அதிலும், இந்த இரு படங்கள் வெளிவந்த ஆண்டுகளைக் கவனியுங்கள். சுடச்சுட காப்பியடிக்கப்பட்டது தெரியவரும்.


வெற்றிவிழா –
இந்த விஷயம், நமது நண்பர்கள் பலபேருக்குத் தெரிந்திருக்கும்.. ‘Bourne Identity’ நாவலே தமிழில் வெற்றிவிழாவாக மாறியது.


குணா –
இன்றும், கமலின் ரசிகர்களால் மறக்கவியலாத படம் இது. அவ்வளவு அருமையான படம். ஒரு மனநலன் குன்றிய நபர், தனக்கு இன்னொருவரால் கற்பிக்கப்பட்ட ‘அபிராமி’ என்ற கற்பனைப் பெயரின்மீது பைத்தியமாகி, பின் ஒரு பெண்ணை, அபிராமி என்றே நினைத்து, கடத்தி, பின் இருவரும் இறந்துபோவது,குணாவின் கதை.


உலக சினிமா ரசிகர்களுக்கு, பெத்ரோ அல்மதோவார் (Pedro Almodóvar) பற்றித் தெரிந்திருக்கும். மறக்கவியலாத பல அருமையான படங்களை இயக்கியவர். தற்கால உலக சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்.


இவர், 1990ல் இயக்கிய ஒரு ஸ்பானிஷ் படமே, ‘Tie me up tie me down !’. இதன் கதை, வேறொன்றுமில்லை. ’மரீனா’ என்ற ஒரு நடிகை மீது பைத்தியமாக இருக்கும் ரிக்கி என்ற மனநலம் குன்றிய இளைஞன், அவளைக் கடத்தி, சிறை வைத்து, அவளைத் திருமணம் செய்வதற்காகவே இவ்வாறு கடத்தியதாகச் சொல்ல, முதலில் அவனை வெறுத்து, அவனிடமிருந்து தப்பித்து, அதன்பின் அவனால் கவரப்பட்டு, காதலில் விழுந்து, பின் இருவரும் இணைவதே கதை.


குணா - Tie me up tie me down ! படத்தின் அப்பட்டமான காப்பி என்பது இப்போது புரிகிறதா?


மகளிர் மட்டும்  –
இது, கமல்ஹாஸன் தயாரித்த படம். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கம். ஜொள்ளு மேலதிகாரியால் பாதிக்கப்படும் மூன்று பெண்களைப் பற்றிய கதை.


சரி. அருமையான படம்தான். இப்போது, Nine to Five (1980)’ என்ற படத்தின் கதையைப் பார்ப்போம். தங்களது ஜொள்ளு மேலதிகாரியால் பாதிக்கப்படும் மூன்று பெண்களின் கதை தான் இது. அடடே ! மேலே மகளிர் மட்டும் படத்தின் கதைச் சுருக்கத்தையே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப்போகிறதே !! (ஆச்சரியக்குறி).


நம்மவர் –
இன்றும், கமலின் ரசிகர்கள், அவரை அழைக்கும் பெயர்களில் ஒன்றாகவே மாறிப்போன படம் இது.  ரவுடிகள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வாத்தியாராக வரும் ஒரு ஆள், அந்த மாணவர்களை மாற்றியமைப்பதே கதை.


To Sir with Love (1967)
படத்தைப் பார்ப்போம். இது, மிகப் பிரபலமான ஹாலிவுட் கறுப்பின நடிகர் சிட்னி பாய்ட்டியர் (பல இன்னல்களைக் கடந்து வந்து சூப்பர் ஸ்டார் ஆனவர்) நடித்தது. சில ரவுடி மாணவர்கள் படிக்கும் ஒரு கல்லூரிக்கு வரும் ஒரு வாத்தியாரின் மீது கோபம் கொள்ளும் மாணவர்கள், எதிர்வினை புரிவதும், இதனால் பாதிக்கப்படும் வாத்தியார், தனது பிரத்யேக வழிமுறைகளினால் அவர்களை வழிக்குக் கொணர்வதே கதை. வாத்தியார், மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் படலம் கூட இதில் உண்டு. (கேன்சர் மட்டும் கமலின் கைவண்ணம்).


சதி லீலாவதி –
நகைச்சுவை நடிப்பில் கமல் முத்திரை பதித்த படம். கதை என்ன? மனைவி குண்டாக, கவர்ச்சியற்று இருப்பதால், இன்னொரு பெண்ணுடன் பழகும் ஒருவனை, அவனது நண்பன் திருத்துவதே கதை.


She – Devil (1989)
என்ற படம், இதே கதையோடு வந்திருக்கிறது. கதை? ரூத் என்பவள், ஒரு மிகக்குண்டான பெண். தனது கணவன் பாப்பை அன்புடன் கவனித்துக் கொள்பவள். ஆனால், பாப்புக்கு மனைவி குண்டாக இருப்பது பிடிக்கவில்லை. எனவே, தான் சந்திக்கும் ஒரு எழுத்தாளினியோடு காதல் வசப்பட்டு, அவளுடனே போய்விடுகிறான். மனது நொறுங்கும் அந்த மனைவி, திட்டம் போட்டு பாப்பைத் திருத்துவதே கதை. ஆனால் இதில், நண்பன் கதாபாத்திரம் இல்லை. மூலப்படத்தில் மனைவி செய்த விஷயங்களை, தனக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, கமல் நடித்தார்.


அவ்வை சண்முகி –
இப்படம், Mrs. doubtfire படத்தின் தழுவல் என்பதுதான் பலரின் எண்ணம். ஆனால், இது ‘Tootsie (1982)’ படத்தின் அட்டைக்காப்பி என்பது, ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறேன். முடிந்தால் டூட்ஸியின் கதையை, மேலே க்ளிக்கிப் படிக்கவும். படத்தைப் பார்த்தால், இன்னும் உத்தமம்.


பஞ்ச தந்திரம் –
ஐந்து நண்பர்கள். இடையே ஒரு விலைமாது. குழப்பங்கள்.


இப்போது, ’Very bad things (1988)’ என்ற படம். ஃபிஷர், தனது நான்கு நண்பர்களுடன், திருமணத்துக்கு முந்தைய பேச்சிலர் பார்ட்டியை, லாஸ் வேகாஸில் கொண்டாடுகிறான். அப்போது, போதையில், அங்கு நடனமாடும் பெண்ணைக் கொன்றுவிடுகிறான். இதனை மறைத்து, ஹோட்டல் ரூமில் ஒளித்து வைக்கப்படும் பிணத்தை, அவனது நண்பன் பாய்ட் டிஸ்போஸ் செய்து, அதன்பின் நடக்கும் குழப்பங்களையும் சமாளிக்கிறான்.  இந்த நண்பர்களில் சிலருக்கு ஏற்படும் நடுக்கத்தால், மெல்ல மெல்ல விஷயம் வெளியே கசிகிறது. ஆனால், ஃபிஷர், ஹோட்டலில் ஒரு விலைமாதுவுடன் ஏற்பட்ட கசமுசாவாக ஒரு பொய்யை ஜோடித்து, அதன்மூலம் கதையைத் திசைதிருப்புகிறான். பின் நடக்கும் குழப்பங்களே கதை.


இது காப்பியா இல்லையா?


தெனாலி –
இது, ‘What about Bob’ படத்தின் காப்பி. பாப் என்பவன், பல ஃபோபியாக்களைத் தனக்குள் வைத்திருக்கும் ஒரு பயந்தாங்குள்ளி. லியோ என்ற மருத்துவரிடம் வருகிறான். ஆனால், அப்போது, அவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிடுகிறார். பாப்பை லியோவிடம் அனுப்பியது, லியோவின் போட்டி மருத்துவர் ஃபென்ஸ்டர்வால்ட்.


சுற்றுலா சென்ற இடத்துக்கு, பாப், தனது மருத்துவரைத் தேடி வர, கடுப்பாகும் லியோ, பாப்பை ஒரு பஸ்ஸில் ஏற்றி அனுப்ப முயல்கிறார்.  போகும் பாப், மறுபடி மறுநாள் அங்கேயே வந்துவிடுகிறான்.  லியோவின் குடும்பத்துக்கு பாப்பை மிகவும் பிடித்துவிடுகிறது. ஆனால், லியோ பாப்பை வெறுக்கிறார். லியோ கொடுக்கும் தொலைக்காட்சிப் பேட்டியில் கூட, பாப் குறுக்கே வந்துவிடுவதால், பாப்பே பேசிப் பிரபலமாகிவிட, லியோவின் கடுப்பு எகிறுகிறது.  அவனை இழுத்துக்கொண்டு ஒரு பைத்தியக்கார விடுதிக்குச் செல்லும் லியோ, அங்கேயே அவனை விட்டுவிட்டு வந்துவிடுகிறார். ஆனால், மறுநாள்  அங்கிருந்து அவனை அழைக்கும் நிர்வாகிகள், பாப் சொல்லிய நகைச்சுவைக் கதைகளால் கவரப்பட்டு, அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லி, விடுவித்துவிடுகின்றனர். கடுப்பாகும் லியோ, பாப்பை குண்டுக்கட்டாகக் கடத்தி, காட்டில் விட்டுவிட்டு வர, அதிலிருந்தும் மீண்டுவிடுகிறான் பாப். கடைசியில், லியோவின் ஈகோ, பாப்பினால் எப்படித் திருத்தப்படுகிறது என்பதே கதை. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, தெனாலி இந்த ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி.


அன்பே சிவம் –
இதுவும், பல பேருக்குத் தெரிந்திருக்கும். ‘Planes, Trains and Automobiles’ என்ற ஆங்கிலப்படத்தின் புத்திசாலித்தனமான காப்பி. புத்திசாலித்தனம் என்று ஏன் சொன்னேன் எனில், மேல் பார்வைக்கு, இது அப்படித் தெரியாது. ஆனால், ஊன்றிக் கவனித்தால், காப்பியடித்தது தெரியும்.


ஹே ராம் –
கமலின் மிகச்சிறந்த படமாக இன்றும் சொல்லப்படும் படம் இது (ஆனால், இப்படத்திலும், வழக்கப்படி தனது இந்துத்துவ ஈடுபாட்டையும், முஸ்லிம் வெறுப்பையும் கமல் வெளிப்படுத்தியிருப்பார் என்பது வேறு விஷயம்).


‘Barabbas (1961)’
என்று ஒரு படம். இது, ஒரு பைபிள் கதை. ஏசுவைச் சிறைபிடிக்கும் அரசு, ஏசு அல்லது பரப்பாஸ் என்ற கைதி – இருவரில் ஒருவரைத்தான் விடுவிக்க முடியும் என்று சொல்ல, மக்கள் தேர்ந்தெடுப்பது பாரப்பாஸை. விளைவாக, ஏசு சிலுவையில் அறையப்படுகிறார். ஏசுவுக்குப் பதிலாகத் தான் ஏன் விடுவிக்கப்பட்டோம் என்ற கேள்வி, பாரப்பாஸை, படம் முழுக்க அலைக்கழிக்கிறது.


இதில், பாரப்பாஸ் ஒரு குருட்டுப் பிச்சைக்காரியை எதிர்கொள்ளும் காட்சி, ஹேராமில் அப்பட்டமாகக் காப்பியடிக்கப்பட்டதைக் காணலாம். மட்டுமில்லாமல், சற்றே யோசித்துப்பார்த்தால், காந்திக்குப் பதில் ஏசு, பாரப்பாஸுக்குப் பதில் ராம் என்ற ஒற்றுமையைப் புரிந்துகொள்ளலாம்.


மற்றபடி, நாயகன், தேவர் மகன் (காட்ஃபாதர்), விருமாண்டி (திரைக்கதை உத்தி – ரஷோமோன் & படத்தின் தீம் – Life of David gale) போன்ற படங்களைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.


இந்த காப்பியடித்த பட்டியலைப் பார்த்தால், கமல் ஒரிஜினலாக நடித்த படங்கள் மிகக்குறைவே என்பது தெரிகிறது. அவரது ஒரிஜினல் கதைகளுக்கு, தசாவதாரம் போன்ற குப்பைகளை உதாரணமாகக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.


இப்பொழுதும் சொல்கிறேன். கமல் எண்பதுகளில் ரஜினியுடன் போட்டிபோட்டு மசாலாப்படங்களில் நடித்தபோது, நான் அவருக்கு ரசிகன் தான். ஆனால், அவர் காப்பியடிக்க ஆரம்பித்து, அதைப்பற்றி நான் தெரிந்துகொண்டவுடன், அவர் மேல் ஒருவித அசூயை ஏற்பட்டுவிட்டது.  இந்த அசூயை ஏனெனில், plagiarism என்பது மன்னிக்க முடியாத குற்றம். தன்னை ஒரு அறிவுஜீவியாக, பெரியாரின் வழித்தோன்றலாகக் காண்பித்துக் கொள்ளும் ஒரு மனிதர், இப்படி சரமாரியாகப் பிற படங்களைச் சுட்டுப் படங்கள் எடுத்து, அதனை இவரே சொந்தமாகச் செய்ததுபோல் ஜம்பம் அடித்து (இதில் ஆஸ்கர் ஆஸ்கர் என்ற கூக்குரல் வேறு) விளம்பரப்படுத்துவதைக் கண்டிப்பாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.


இன்னொரு விஷயம்: பொதுவாக, S.A ராஜ்குமார், தேவா போன்றோர், பிற படங்களின் பாடல்களைக் காப்பியடித்தால், நாம் அவர்களுக்கு அளிக்கும் பட்டம் என்ன? ’ஜெராக்ஸ்’ என்பது. ஆனால், மணிரத்னம், கமல்ஹாஸன் போன்றோர் அதையே செய்தால், அதனை Inspiration என்று பூசி மெழுகும் வேலையையும் நாம் தான் செய்கிறோம். இல்லையா?


கட்டுரை நீண்டுவிட்டதால், இத்துடன் முடிக்கிறேன். மீண்டும், நேரம் கிடைத்தால், தொடருவோம்.


பி.கு  1– என்னதான் காப்பியடிப்பதைப் பற்றி நான் எழுதினாலும், நான் ரஜினி ரசிகன்; ஆகவே கமலைத் திட்டுகிறேன்.. கமல் நடிப்புக் கடவுள்.. இத்யாதி ரீதியிலான பின்னூட்டங்கள் வரத்தான் போகின்றன என்பது தெரியும். இருந்தாலும், கமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் இந்தக் காப்பியடிக்கும் வேலையைச் சொல்லாமல் இருப்பது சரியாக இருக்காது என்பதனாலேயே இதனை எழுதினேன்


பி.கு 2 – இக்கட்டுரைக்குப் பெரிதும் உதவிய தளம் – Sen’s Spot. இந்தத் தளத்தில், விடியோ காட்சிகளுடன் ஆதாரங்கள் உள்ளன. நான் கமல் அல்ல என்பதால், ஒரிஜினல் பதிவை இங்கே வெளியிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை


பி.கு 3 – நமது சாரு, இந்தியா டுடேவில் சென்ற வருடம் கமலைப் பற்றி எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘நிகழ மறுத்த அற்புதம்’. அதுதான் இக்கட்டுரையின் தலைப்பும் கூட

.

312 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 312   Newer›   Newest»

யோவ்... இந்த ஆங்கில மற்றும் உலகப்படங்கள் எல்லாமே, கமல் படமெடுத்தப்புறம், அதைப் பார்த்துக் காப்பியடிச்சதுதான்... இதுகூடத் தெரியாம பதிவு எழுத வந்துட்டே... அடிங் !

நெகட்டிவ் குத்துகள் தொடங்கட்டும் !! யாரங்கே ;-)

me the firstuuuuuuuu...for நெகட்டிவ் குத்துகள் தொடங்க ;-)

கருந்தேள்,
நீங்கள் விட்டு விட்ட ஒன்றை என்னுடைய பெர்சனல் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் சவுத் இந்தியாவின் நம்பர் சேனலின் பொறுப்பான பதவியில் இருந்தபோது (அதுக்காக இப்போ பொறுப்பில்லாத பதிவியில் இருக்கியா என்று கேட்கக் கூடாது - இப்போ வேற சேனல்) மும்பை எக்ஸ்பிரெஸ் படம் வர இருந்தது. அப்போதுதான் எங்கள் சேனல் சார்ந்த ரேடியோவில் அவரது நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகி இருந்தது.

சேனல் நண்பர்கள் அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்க சில நிமிட இடைவெளி இருந்ததால் நாங்கள் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர் படத்தின் புரோமொஷனை பற்றி பேசினார். நான் சொன்னேன் " இந்த படத்த்தின் Tag Lines அப்படியே Johnny English என்ற படத்தின் Tag Lines மாதிரியே இல்லை?" என்று. (He Knows No Fear, He Knows No Danger, In Fact, He Knows Nothing)என்பதுதான் அந்த படத்தின் Tag Line.

அவ்வளவுதான். மனிதர் அதனை சமாளிக்க கடும் சிரமம் எடுத்த்துக்கொண்டார், பிறகு நடந்த விஷயங்கள் அவ்வளவு சுவாரச்யப்படாது.

பிரிச்சு பேன் பாத்துடீங்க போங்க....
இவர பத்தி நெறைய கேள்வி பட்ருக்கேன் ஆனா ஆதாரத்தோட படிக்கும் போது காரி துப்பலாம் போல இருக்கு scorpy.....

அதுக்கு சூப்பர் ஸ்டார் பேச்சை கேட்டீங்களா "நான் ஒரு கொழந்தை இந்த வயசுலயும் என்ன ஆட வச்சு தமிழ் நாட்டு மக்கள் ரசிக்கிறாங்க".... Open statement.... கர்வம்னா கிலோ என்ன விலைன்னு கேப்பாரு....

நான் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ ஆதாரத்தோடு தெரிஞ்சுகிட்டேன்.

அக்கு வேறு ஆணி வேறா எங்க 'தலைவர' பிரிச்சு மேஞ்சிட்டிங்களே தல... நடு நடுவில் 'மணி'யையும் அடிச்சு துவம்சம் பண்ணிடீங்க... நீங்க சொல்ற எல்லாம் சரிதான், கமல் ஒரு காப்பி ஜாம்பவான்னு நீங்க சொல்றது தெளிவா புத்திக்கு தெரிந்தலும், மனசு கேட்க மறுக்குது. கமல் தான் தமிழ் சினிமானு சின்ன வயசிலருந்தே ஃபார்ம் பண்ணிட்டோம். தமிழன் குணம், மாத்துறது கஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் கமல் செய்தால் அது இன்ஸ்பிரேஷன் மட்டும் தான்... மன்னிச்சிக்கோங்க... நாம கண்டிப்பா மீட் பண்ணனும் தல...

கமல் தயாரிப்பில் வெளிவந்த மாதவன் நடித்த 'நள தமயந்தி', Green Card (1990) படத்தோட அப்பட்ட காப்பி. நீங்க சொல்ல மறந்துட்டீங்க... :)

நீங்க சொன்ன படம் எதயும் நான் பார்த்தது இல்லை... படம்னா நிங்க கமல் இதுலேந்து காப்பி அடிச்சாருன்னு சொல்ற அந்த இது எதயும் நான் பார்த்ததில்ல.. அதுக்காக அவர் காப்பி அடிச்சது எதயும் நான் நியாயப்படுத்தல.. ஒரு லே மேனா எனக்கு அவரோட நடிப்பு நிச்சயமா புடிக்கும்.. அவரோட படத்த ரசிக்கிறேன்.. மே பீ நிங்க சொன்ன ஒரிஜினல் எல்லாத்தயும் நான் பார்த்தாலும் அதயும் ரசிப்பேன்.. Thanks for the Info தேளு...

இவ்ளோ நடந்துருக்கா.. ஆனாலும் ‘தேவர் மகன்’ ஒரு நல்ல அடாப்ஷன் -னு சொல்லலாம்.. எனக்கு ரொம்ப பிடிச்ச படம்..

ஒரு விஷயம் என்னன்னா.. இவர் அதை பார்த்து இன்ஸ்பயர் ஆனதெல்லாம் சரி தான்.. ஆனா க்ரெடிட்ஸ் கொடுத்திருக்கணும்..

ஆனா பல தமிழ் இயக்குனர்கள் இப்படி தான் இருக்கிறார்கள்... ‘மெமண்டோ’ பலருக்கும் புரியவில்லை. நாங்கள் கஜினியை சிறப்பாக எடுத்ததாக திரு.முருகதாஸ் சொன்னதாக நினைவு!!!!

மனசுக்குள்ளேயே நினைத்து நினைத்து புளுங்கி கொண்டிருந்தது கருந்தேள்,
நமக்கு மட்டும் ஏன் ஒரு நல்ல படைப்பாளி கிடைக்கவில்லை இதுவரை என்று,
கண்டிப்பா கமல் ஒரு நிகழ மறுக்கும் அற்புதம்,
குருதி புனல் வந்த காலத்துல இருந்தே முகமுடிக்கு பின்னே இருக்கும் கமலினை கண்டு கொள்ளமுடியும்,
அந்த போராளி குழுவினை பற்றிய எந்த விதமான தகவல்களும் தராமல் அவர்களை சமூகத்திற்கு எதிரானவர்களாகவே படம் முழுக்க காட்டிருப்பார்,
வெள்ளை நிற குர்தா அணித்திருகும் பணக்கார சிறுவனை தெருவோரம் கால்சட்டை கிழிந்த சிறுவர்கள் வன்முறைக்கு அழைப்பதை போன்று மிக அபத்தமாக முடித்திருப்பார்,
இந்த படத்தினை பார்த்துவிட்டு சில பேர் கமல் எண்ணாமா படம் எடுத்திருக்கார் பாருடா அப்படிபாங்க,
என்னாடா அப்படி அவர் எடுத்த்துடார்ன்னு கேட்டா அதுக்கு "பாட்டுனா இல்லாமா முத்த காட்சினா தைரியமா வச்சி ஆங்கில படம் மாதிரி எடுதுருக்கார் பாரு" அப்படின்னு சொல்லுரப்ப அப்படியே ஒரு அப்பு அப்பிரலாமானு தோணும்,
அப்ப பார்த்து கடைசியா ஒண்ணு சொல்லுவான்ங்க அங்கதான்டா கமல் நிற்கிறார்ன்னு,
எங்கடான்னு கேட்டா கடைசியா அந்த அனாதை பசங்க அந்த நல்ல வெள்ளை சட்டை போட்ட பையனையும் வன்முறைக்கு அழைக்குறாங்கன்னு முடிச்சாறு பாரு அங்கதான்டா கமல் நிற்குறார்ன்னு சொல்லுவாண்ங்க,
அப்படியே வரும் பாருங்க கோவம் இந்த மாதிரி படம் எடுப்பதுக்கு பதிலா கதாநாயகி தொப்புள்ல பம்பரம் விடுறமாதிரி படம் எடுத்துட்டு போயிரலாம் இவர்னு தோணும்,
அயல்நாட்டு படங்கள் என்றாலே அந்த மாதிரியான காட்சிகள்தான் என்று நினைக்கும் சாதாரண ரசிகனுக்கு கமல் தந்து கொண்டிருக்கும் மாற்று சினிமா முத்த காட்சிகள் கொண்ட இந்த மாதிரியான படங்கள்தான்.

தாத்தாவா ஆகியும் ரோபோவா மாறி ஐஸ்வர்யா ராய் கூட டூயட் ஆடி மக்களை மகிழ்விக்கும் ரஜினி கண்டிப்பா ஆயிரத்தில் ஒருவர்தான்.

இன்னும் நிறைய கும்மனும் போலதான் இருக்கு கருந்தேள் கும்முனா உங்க பதிவ விட இந்த கமென்ட் பெருசா ஆகிடும்.

பின் குறிப்பு: ஹி ஹி ஹி நானும் ஒரு கமல் ரசிகன்தான்........:)

கருந்தேள் நம்ம தல ஆயிரம் கமெண்ட்கள் வாங்கிய அபூர்வ ஹாலி பாலி ஆளையே காணாம்,நானும் ஒரு வலைபூ தொடங்கி முன்பு போல் பதிவுகள் போடாத நம்ம தலைய பத்தி எழுதலாமானு இருக்கேன்,
தலைப்பு "எழுத மறுக்கும் அற்புதம்"

கருந்தேள்!! மகாநதி விட்டு போச்சு. நான் என் அப்பாவுடன் சிறு வயதில் மிகவும் ரசித்த படம். லைட்டா 'லாக்கப்'ல இருந்து உருவிட்டாங்கன்னு கேள்விபட்ட போது செம கடுப்பாக இருந்தது.

'ராஜ பார்வை' பார்த்து சிலாகித்து விட்டு, சரியா இரண்டு நாட்களுக்கு பிறகு 'The Graduate' பார்த்த போது அடுத்த கடுப்பு.

'அவ்வை சண்முகி'யில் 'Cramer Vs Cramer' படத்தின் சாயலும் இருக்கும்.

நான் மணிரத்னத்தை பற்றி எழுதிய பதிவை ஃபேஸ்புக்கில் இட்ட போது, என் நெருங்கிய நண்பர் ஒருவர் இதை காப்பி என எடுத்து கொள்ளக் கூடாது என வாதிட்டார். அவர் அதற்கு கூறிய நியாயமான உதாரணம், 'Yojimbo'வை தழுவி எடுக்கப்பட்ட 'Fistful of Dollars'. செர்ஜியோ லியோனி அதற்கு ஒரு க்ரெடிட்டும் தரவில்லை. அதே போல் 'Seven Samurai'யை தழுவி எடுக்கப்பட்ட 'The Magnificient Seven'லும், அகிரா குரசேவாவிற்கு எந்த க்ரெடிட்டும் தரவில்லை.

அகிரா குரசேவாவின் படங்களை 'Take it for granted' என்று எடுத்து கொண்டிருந்த ஹாலிவுட், முதல் முறை அவருக்கு க்ரெடிட் கொடுத்தது 'Last Man Standing' படத்தில் தான்.

கமல் தழுவி எடுத்த இதையெல்லாம் ஒரு வகை ட்ரிப்யூட்டாக எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தாலும், ட்ரிப்யூட் கொடுத்தா அதுக்கு க்ரெடிட் போடனுமே? ஒரு வேளை கமலின் ஈகோ தடுக்கிறதோ? ஏற்கனவே சசி தன்னுடைய 'பூ' படத்தில் 'The Road Home' இயக்குநர் ஷாங் ஈமூவிற்கு நன்றி தெரிவித்து இருந்தார். அதே போல் மற்ற இயக்குநர்களும், தாங்கள் தழுவி எடுத்த படங்களுக்கு க்ரெடிட் போடுவார்கள் என நம்புவோமாக...

நானும் மொதல்லையே சொல்லிடிறேன்.. நான் கமல் ரசிகனா என்னைக்குமே இருந்ததில்லை..
அவர் நிறைய காப்பி அடிச்சிருக்கார் என்பதையும் ஒத்துக்கறேன்..

நான் குணா பார்த்ததில்லை. ஆனால் Tie me up tie me down பார்த்திருக்கேன். அதனால குணா பார்த்துட்டு அது காப்பியா இல்லையான்னு சொல்றேன்..

ஆனால் அன்பே சிவத்துக்கும், Planes Trains and Automobiles படத்துக்கும் என்ன சம்பந்தம்?? இரண்டு மாற்று கருத்து கொண்டவர்கள், ஒரு வலுகட்டாய பயணத்தை வேறுவழியின்றி இணைந்து மேற்கொள்கிறார்கள் என்பதை தவிர?

ஆதாரபூர்வமான பதிவு. ஆனா தேளு, எத்தனையோ ஆங்கில படம் பார்த்தும் ஒரு வசனமும் புரிஞ்சிக்க முடியாத என்ன மாதிரி ஆளுங்களுக்காக தான் கமல் சார் தமிழ்ல எடுக்கறார்னு நினைக்கிறேன். இல்லனா அன்பே சிவம், கட்டிபுடி வைத்தியம், அபிராமி அபிராமி, எல்லாம் நம்மள பாதிசிருக்குமா. அடிப்படை திரைக்கதையை அவர் பார்த்த ஆங்கில படத்தில இருந்து எடுத்து நம்ம லோக்கல் சரக்கை சேர்த்து வச்சி வியாபாரம் பண்றாரு.
மணிரத்னம் 'ராவணன்' வந்த உடனே வெங்கட் பிரபு 'மங்காத்தா' (மகாபாரதம் - அர்ஜுனனா அஜீத்.) பண்றதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். பாக்கலாம் அந்த பாஞ்சாலி யாருன்னு.

We are taught in School for English Essays
"I am suffering from fever" .plagiarism is taught and trained in schools so we always end up in copying from others in Project reports to Novel ( Kavya Ramakrishnan ) .. so just relax and see the movies . Let original movie makers takes care of Copywrite isses ...

தல .... காபி அடிப்பது என்பது எம்ஜியார் சிவாஜி காலத்திலையே ஆரம்பிச்சுருச்சு .... உதரணத்துக்கு

உத்தமபுத்திரன் - THE MAN IN THE IRON MASK ( உண்மையான சம்பவத்தை கொண்டு எழுதப்பட்ட நாவல்)

அன்பே வா - COME SEPTEMBER

அப்பரும் ரத்த கண்ணீர், ஞான ஒளி .....(இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் .... )

முக்கியமா ROMAN HOLIDAY .... இதை எத்தனை படத்துல மாத்தி மாத்தி காபி அடிச்சு இருக்காங்க தெரியுமா தல .....

- - - -

TO SIR ,WITH LOVE ..... அதொரு நாவல்... அதை பத்தி சொல்லுவீங்கன்னு நினைச்சேன்....

= = = =

தமிழ் சினிமாவுல எல்லோரும் காபி தான் அடிக்குறாங்க...என்ன ஒன்னு சிலர் ஒரு படத்தை காபி அடிக்குறாங்க...

பலர் ஒரு படத்துக்கு பல படத்துல இருந்து சீன்களை காபி அடிக்குறாங்க .....

இப்ப மாட்டு வண்டி RACE ன்ன , ரொம்ப கஷ்ட படாம BENHUR ல இருந்து CHARIOT RACE யை காபி அடிச்சுருவாங்க (ரொம்ப பிரபலமான சீன் அது ....... வண்டி சக்கரத்துல கத்தி வைச்சு இருக்கிறதை கூட விடாம ... மத்தி வைக்காம அப்படியே காபி அடிப்பாங்க)

= = =

சினிமான்னு மட்டுமில்லை ..... இப்ப வர நாவல் புஸ்தகங்களில் கூட CUT COPY PASTE வேலை தான் ஜாஸ்தியா நடக்குது

முக்கியமா அந்த நாவல் ல ...(ஐயோ வேண்டாம் வேண்டாம் ..இதோட நிறுத்திக்கிறேன் ..அப்பரும் இலக்கியவாதிகளோட தொல்லை தாங்கமுடியாது .... SO ME THE ESCAPE )

கருந்தேள் நிச்சயமா இதுக்கு ஒரு பதில் பதிவு எனது பார்வையில் போடுவேன்... ஆனால் இப்போது நேரம் இல்லை...கமல் காப்பி ஆடித்து இந்த படத்தை எடுத்தார் என்று மறுக்க யாராலும் முடியாது என்பதே உண்மை... மத்தபடி ரொம்ப நல்ல எழுதி இருக்கிங்க.. செம புள்ளி விபரம்....

வித விதமா காப்பி அடிக்குறத பாத்தா ஒரு காப்பி டே வச்சுரலாம் போல.

தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியாதுங்க,தமிழ் நாட்டின் பெருன்பான்மை'முதல்வர்கள்'சினிமாவிலிருந்து வந்தவர்கள் என்ற வெட்ககெடான விசயத்தை நாம் அனைவரும் ஒத்து கொள்ளவெண்டும்.

இலவச T.V க்கும், அரசியல் கட்சிகள் கொடுக்கும் பிரியாணி, குவார்ட்டர் ,மற்ற இலவசங்களுக்கும் அலையும் மக்கள
இருக்கும் வரை cut,copy,paste,inspiration எல்லாம் தொடரும்.

"Shanthi Nilayam" is in the base of "SOUND OF MUSIC"

கமல் உலக நாயகன் உலக சினிமா போல எடுக்க முடிந்த ஒரே நாயகன் ,ரீமேக் பண்ணுங்க என்று ச்லச்ச்மேட்ஸ் ரீமேக் நினைத்தாலே இனிக்கும் விழா கமல் சொன்னது ,கம்ப ராமாயணம் கூட ரீமேக் தான் என்றார்.ரஜினி அடிச்சா அமிதாப் கோப்பி படங்கள் யாரும் பார்த்த தில்லையா,பாஷா அமிதாபின் ஹம்,மாவீரன் மர்த்,டான் பில்லா ,எல்லா அமிதாப் ஹிட் பிளம்ஸ் ரஜினி செய்து உள்ளார் ,உலக சினிமாவை கமல் செய்வது போல எப்போது செய்வார் ரஜினி ,இந்திரன் கூட கோப்பி ரோபோகாப் போன்ற பல படங்கள் காபி தான்

கமல் நிகழ்ந்த அற்புதம் தான்

எனக்கு கமலின் அறிவுஜீவி பிம்பம் மட்டும்தான் உறுத்துகிறது..... மற்றபடி அவரின் கலைத்தாகம் ஆச்சர்யம்தான்... அவர் காப்பி அடித்தாரென்றே வைத்து கொண்டாலும் அது பற்றியே தெரியாத என் போன்ற பல ரசிகர்களுக்கு அது அற்புதம்தான்....


என்ன அவரு சொல்லிவிட்டே செஞ்சிருக்கலாம்..... இது ஒண்ணும் பெரிய தப்பு இல்ல மக்கா

கருந்தேள், நல்ல அலசல். கமல் காப்பி அடித்திருக்கும் படங்களில் பட்டியலில் இன்னும் பல படங்கள் விடுபட்டிருக்கலாம்.

கமலை எதற்காகப் போற்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வோம்.

கமல் அரைத்த மாவையே அரைக்க மறுப்பதால்..

கமல் படங்கள் காப்பியாக இருந்தாலும் சாமான்யனுக்குப் புது அனுபவத்தைத் தருவதால்.

விருமாண்டியைக் கூட காப்பி என்று படித்திருக்கிறேன். ஆனால், விருமாண்டியில் இருந்த கிராமத்து வாசனையை யாராலும் மறுக்க முடியாது.

இங்கே நமக்கு என்ன பிரச்சனை?

கமல் உலகத்தரத்தில் படங்களில் எடுப்பதாகச் சொல்வதா?

சொந்த சரக்கு இல்லாததாலேயே.. பேசாமல் அவர் தொப்புளில் ஆம்லேட் போடப் போகலாம் என்று கூறுவதெல்லாம் நகைப்பிற்குரியது. காப்பியாக இருந்தாலும் நல்ல அனுபவத்தைத் தந்தால் போதுமானது தானே.

மற்ற நடிகர்கள் (?) எல்லாம் அவர்களது மசாலாக்களையே அரைக்கும் வேளையில் இது தேவலாம் தானே..

சில வருடங்கள் முன்பு வரை கமல் படங்கள் தான் என்னைப் பொறுத்தவரையில் உலகப்படங்கள்.. (ஆனால் இப்பொழுது அல்ல..)

கருந்தேள், உங்களைப் போல உலகப்பட ஞானம் உள்ளவர்கள் எத்தனைப் பேர்.. எத்தனைப் பேரிற்கு உலகப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது?

I wrote a blog post on October 2, 2006: http://greycellfiles.blogspot.com/2006/10/so-much-for-co-incidences.html

All the movies you mentioned above has been detailed and explained in this post. This is such a co-incidence that you mentioned most of the same movies I have mentioned. I also did a research and came up with the trailers of the movies, Kamal has copied from: http://greycellfiles.blogspot.com/2008/07/panchathantiram-expose-very-bad-things.html. this I posted on July 22, 2008. I am very pleased that someone shares the same views as I do....

Man, I just read your Deva comment....kamal has copied alright, but it loks like you have copied my blogpost too...this is the irony of the century, I wrote this blog way back in 2006 and you have reproduced it in your own words...nobody can tamper the date on blogspot...my blog stands as testimony....a blog about copying or pagiarism has been plagarised itself....wow....

இந்த பதிவு ஒரு ஈயடிச்சான் காப்பி பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இது போன்று , படங்களும் அது எதிலிருந்து காப்பி அடிக்க பட்டது என்றும், கமலை பற்றியும் அவர் படங்களை பற்றியும் ஏகப்பட்ட பதிவு போட்டு விட்டார்கள். சொந்த கருவில் பதிவே போட முடியாத நமக்கு , அடுத்தவன் அடிக்குற காப்பிய பத்தி கவலை எதற்கு ?

நானும் கமலை நடிகனாக ரசிச்சவன் ..ரசிக்கிறவன் ...ரசிக்கபோகிறவன் .... ஆனால் உங்கள் கட்டுரையின் நேர்மையும் நேர்த்தியும் அருமை ... வாய்ப்பு கிடைத்தால் இந்த எல்லா படங்களை பற்றியும் தனித்தனியாக இன்னும் விரிவாக எழுதி வையுங்கள் .. " எப்படி அழகாக அற்புதமாக நேர்த்தியாக , எல்லோரும் பாராட்டும்படி உலக படங்களை காப்பி அடிக்கலாம் என Film Institute மாணவர்களுக்கு பாட புத்தகமாக வைக்கலாம் "

வாழ்த்துக்கள் நண்பா

@ விஸ்வா - உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.. ;-)

@ சரவனகுமரன் - இப்போதைக்கு அவ்வளவுதான் பாஸ் ;-)

@ ஆனந்த் பாபு - ஹ்ம்ம்ம்... கமல் மேல எனக்கு எந்த grudgeஉம் இல்ல.. ஆனா காப்பியடிப்பதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியலை .. அதான் இது ;-)

@ எஸ்.கே - ரைட்டு பாஸ் ;-)

@ பேபி ஆனந்தன் - எனக்கு உங்க மனசு புரியுது.. கவலைய விடுங்க.. ஃப்ரீயா உடுங்க மாமு... மீட் பண்ணலாம் சீக்கிரமே ;-)

@ இராமசாமி கண்னன் - ரைட்டு தல.. ;-) இந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு ;-)

@ கனகு - கரெக்ட். இன்ஸ்பைர் ஆகட்டும்.. தப்பே இல்ல.. ஆனா க்ரெடிட் குடுக்கணுமா வேணாமா? கட்டாயம் குடுத்தே ஆகணும் ..

@ Keanu - உங்க பின்னூட்டத்துக்கு பதில் போடணும்னா, ஒரு பதிவே எழுதணூம்.. இருங்க.. மத்த பின்னூட்டத்துக்குப் போட்டுட்டு உங்க கிட்ட வரேன் ;-)

@ பிரசன்னா ராஜன் - உங்க நண்பர் சொன்ன லாஜிக் என்னால ஒத்துக்க முடில.. க்ரெடிட் குடுக்கலன்றதுக்காக, அது காப்பி இல்லைன்னு ஆகிவிடாது இல்லையா? மத்தபடி, உங்க பின்னூட்டத்தை முழுமையாக வழிமொழிகிறேன் ;-)

@ சரவணகுமார் MSK - //ஆனால் அன்பே சிவத்துக்கும், Planes Trains and Automobiles படத்துக்கும் என்ன சம்பந்தம்?? இரண்டு மாற்று கருத்து கொண்டவர்கள், ஒரு வலுகட்டாய பயணத்தை வேறுவழியின்றி இணைந்து மேற்கொள்கிறார்கள் என்பதை தவிர?//

இதைத்தான் புத்திசாலித்தனமான காப்பி என்று சொன்னேன். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கதை தான் அன்பே சிவத்தின் மொத்தக் கதையும் அல்லவா? இடையே வரும் கம்யூனிஸ்ட் விஷயங்களெல்லாம் கமலின் இடைச்சொருகல்கள்.. காப்பி இல்லை என்று காண்பிப்பதற்கு..

மற்றபடி, என்னாது நீங்க இன்னும் குணா பாக்கலையா? அதைப்போயி பார்த்துட்டு வாங்க முதல்ல தல ;-)

@ VSP - என்னுடைய கருத்து என்னன்னா, காப்பி அடிக்கட்டும். தப்பே இல்லை. ஆனால், ஒரிஜினலுக்குக் க்ரெடிட் குடுத்துட்டு காப்பி அடிக்கட்டும்றதுதான். இப்ப என்ன ஆயிடுச்சுன்னா, இப்படி காப்பி அடிச்சிப் படங்கள் எடுத்த கமலை, அறிவுஜீவின்னு எல்லாரும் கொண்டாடி, அவரை ஒரு ஜீனியஸ் ரேஞ்சுக்குக் கொண்டுவந்தாச்சு. ஆனால், அவரோட சமுதாயப் புரிதல் எவ்வளவு மட்டம்னு அவரோட படங்களைப் பார்த்தா தெரியும். இதுதான் தப்புன்றது என்னுடைய வாதம் நண்பா..

@ Ravindiran Chinnaswami - கரெக்ட் தான் பாஸ்...

@ டம்பீ மேவி - உங்கள் தகவல்கள் எல்லாமே ரைட்டுதான்.. தமிழில் ஆரம்பமுதலே காப்பிகள் உள்ளன. ஆனால், கமல்தான் பெருவாரியாக, காப்பியடிப்பதே தொழிலாக செயல்படுபவர். அதான் அவரைப்பற்றிச் சொல்லலாமே என்று எழுதினேன். உங்கள் புள்ளிவிவரங்களுக்கு மிக்க நன்றிகள்..

@ ஜாக்கி சேகர் - ரைட்டு ;-).. உங்க பதிவுக்குக் காத்திருக்கிறேன்.. ;-) நன்றி..

@ அலைகள் பாலா - ஹாஹ்ஹாஹ்ஹா... ;-) இதை, அரசாங்கம் பரிசீலிக்கலாமே ;-)

@ சரவணக்குமார் - மிகச்சரி... அப்படியே ஒத்துக் கொள்கிறேன்.

@ வாடாமல்லி - ஆமாண்ணா... சாந்தி நிலையம் சௌண்ட் ஆஃப் ம்யூஸிக்கின் அட்டைக்காப்பி தான் ... நன்றி..

@ Access - உங்கள் கோபம் புரிகிறது. காப்பி அடிப்பதில் தவறில்லை தலைவா.. ஆனால், மூலத்துக்கு உரிய க்ரெடிட் கொடுக்க வேண்டும் அல்லவா.. அதைத்தான் சொன்னேன்..

@ கண்ணா - //என்ன அவரு சொல்லிவிட்டே செஞ்சிருக்கலாம்..... இது ஒண்ணும் பெரிய தப்பு இல்ல மக்கா//

இதைத்தான் நானும் சொல்றேன். மூலப் பிரதிக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் அல்லவா?

@ க. செந்தில்வேலன் - என்னுடைய கருத்து, காப்பியடித்த மூலப்படங்களுக்கு உரிய க்ரெடிட் கொடுக்க வேண்டும் என்பதே. மட்டுமல்லாமல், பிற படங்களைக் காப்பியடித்துப் படம் எடுத்து, அதில் வரும் புகழை எப்படி எடுத்துக்கொள்ள முடிகிறது? guiltyஆக இருக்காதா?

@ prashanth Ramakrishnan - என்னுடைய பதிவில், கடைசியில், பி.கு - 2 கவனியுங்கள். அதில், என்னுடைய பதிவின் ஆங்கில மூலத்தைக் கொடுத்திருக்கிறேன். லின்க்கோடு. உங்கள் பதிவை நான் பார்க்கவே இல்லை. அதுதான் உண்மை. அந்த ஆங்கிலப்பதிவில், பின்னூட்டங்களைக் கவனியுங்கள். தேவா விஷயம் புலப்படும். மற்றபடி, இந்த ஆங்கிலப்பதிவு, உங்கள் பதிவுக்கு முன்னாலேயே எழுதப்பட்டுவிட்டது. And, நீங்கள் ப்ரூஃப் எல்லாம் கொடுக்கவே வேண்டியதில்லை... ;-) நன்றி..

@ அஹோரி - //இந்த பதிவு ஒரு ஈயடிச்சான் காப்பி பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இது போன்று , படங்களும் அது எதிலிருந்து காப்பி அடிக்க பட்டது என்றும், கமலை பற்றியும் அவர் படங்களை பற்றியும் ஏகப்பட்ட பதிவு போட்டு விட்டார்கள். சொந்த கருவில் பதிவே போட முடியாத நமக்கு , அடுத்தவன் அடிக்குற காப்பிய பத்தி கவலை எதற்கு //

இந்தப் பதிவு ஈயடிச்சான் காப்பி என்ற விஷயத்தை, பின்குறிப்பிலேயே தெளிவாகக் கொடுத்திருக்கிறேனே.. பதிவையே ஒழுங்காகப் படிக்க முடியாத நமக்கு, பெரிய லபக்குதாஸ் போன்ற இந்தப் பின்னூட்டம் எதற்கு?;-) .. காமெடி பண்னாம போயி வேலையைப் பாருங்க..

@ தெறிக்கும் கதிர் - உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. அடிக்கடி வாருங்கள்..

உங்களுக்கெல்லாம் மற்றவர்களை குறை சொல்றது தான் வேலை, இதெல்லாம் ஒரு பொழப்பு. நீ மட்டும் சொந்தமா ஒரு ஆர்டிகல் போடு பார்க்கலாம். IMDB / wiki இல இருந்து படிச்சிட்டு மொழி மாற்றம் பண்ணாம.

அட...என்னப்பா DVD, Internet இல்லாத அந்த காலத்துல அண்ணன் இவ்ளோ பெரிய கலைசேவை செஞ்சிருக்காரு...அதுக்கு ஆஸ்கர் குடுக்காம இது என்ன பேச்சு....சின்ன புள்ள தனமா...

இந்த பதிவு ஒரு ஈயடிச்சான் காப்பி பதிவு. ஏற்கனவே பல பதிவர்கள் இது போன்று , படங்களும் அது எதிலிருந்து காப்பி அடிக்க பட்டது என்றும், கமலை பற்றியும் அவர் படங்களை பற்றியும் ஏகப்பட்ட பதிவு போட்டு விட்டார்கள். சொந்த கருவில் பதிவே போட முடியாத நமக்கு , அடுத்தவன் அடிக்குற காப்பிய பத்தி கவலை எதற்கு ?
////////
இவர் கெட்டதிலும் நியாயம் இருக்கு , பதில் சொல்லுங்கக்

உலகில் உள்ள எல்லா படைப்புகளுமே ஏதாவது ஒன்றின் சாயல் இருக்கும்
நீங்கள் சொன்ன படங்கள் எல்லாம் ஒரிசினலா? அவையும் வேறு ஏதாவது படத்தின் சாயலில் இருக்கும்
புத்தம் புதிதாக ஏதும் இல்லை

@ Gopi - //உங்களுக்கெல்லாம் மற்றவர்களை குறை சொல்றது தான் வேலை, இதெல்லாம் ஒரு பொழப்பு. நீ மட்டும் சொந்தமா ஒரு ஆர்டிகல் போடு பார்க்கலாம். IMDB / wiki இல இருந்து படிச்சிட்டு மொழி மாற்றம் பண்ணாம//

இது பாயிண்ட்டு !! தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிக்கப்படவேண்டிய கருத்து இது ;-) .. மேலே சொல்லுங்க ;-) .. படா டமாஸாக்கீதுப்பா ;-)

@ கமல் - அப்புடிப்போடுங்க ! இதுக்கு கட்டாயமா ஆஸ்கர் கொடுத்தே ஆகணும்தான் ;-)

@ பிரியமுடன் பிரபு - ஏங்க.. நீங்க பதிவைப் படிக்கவே இல்லையா.. இந்தப் பதிவு எங்கிருந்து எழுதினேன்னு ஆங்கில மூலத்தோட என் பதிவுலயே லின்க் குடுத்திருக்கேனே ;-)...

மேலே நான் அகோரிக்குப் போட்ட பின்னூட்டத்துலயே அவருக்குப் பதில் சொல்லியாச்சி பாஸ்..

//உலகில் உள்ள எல்லா படைப்புகளுமே ஏதாவது ஒன்றின் சாயல் இருக்கும்
நீங்கள் சொன்ன படங்கள் எல்லாம் ஒரிசினலா? அவையும் வேறு ஏதாவது படத்தின் சாயலில் இருக்கும்
புத்தம் புதிதாக ஏதும் இல்லை//

இது ஒத்துக்கவே முடியாத கருத்து பாஸ்.. பல ஒரிஜினல்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால், நமக்குத் தான் காப்பியடிக்காமல் படமெடுப்பது கடினமாக இருக்கிறது

//நீ மட்டும் சொந்தமா ஒரு ஆர்டிகல் போடு பார்க்கலாம். IMDB / wiki இல இருந்து படிச்சிட்டு மொழி மாற்றம் பண்ணாம.//

அண்ணே!அதே தான்னே! அதுவே தான்.அந்த இழவ தான் தமிழ் சினிமா கிட்ட இருந்து கேக்குறோம்.காபி அடிக்காம நல்ல படம் கொடுங்கடானு.
அது தப்புன்னு குதிக்கிறீங்க? ஆனா,இங்க இப்படி சொல்றீங்க? உங்க 'நியாயம்' எனக்குப் புரியல. ;)

//பொதுவாக, S.A ராஜ்குமார், தேவா போன்றோர், பிற படங்களின் பாடல்களைக் காப்பியடித்தால், நாம் அவர்களுக்கு அளிக்கும் பட்டம் என்ன? ’ஜெராக்ஸ்’ என்பது. ஆனால், மணிரத்னம், கமல்ஹாஸன் போன்றோர் அதையே செய்தால், அதனை Inspiration என்று பூசி மெழுகும் வேலையையும் நாம் தான் செய்கிறோம். இல்லையா? //

இது மேட்டர். இதை நாம சொன்னா , ‘இது அது கிடையாது.அதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.சும்மா கதைய மட்டும் எடுத்து கையண்டாங்க ‘ அப்டின்னு சப்பைக்கட்டு கட்டுவாங்க.

@ இலுமி - //இது மேட்டர். இதை நாம சொன்னா , ‘இது அது கிடையாது.அதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.சும்மா கதைய மட்டும் எடுத்து கையண்டாங்க ‘ அப்டின்னு சப்பைக்கட்டு கட்டுவாங்க//

அது ரைட்டு ! பின்னே.. ? காப்பியடிச்சதை ஒத்துக்கினா, அறிவுஜீவி பிம்பம் ஒடஞ்சி போயிருமே ;-)

அப்புறம், இன்னொரு விஷயம்.

காபி அடிக்கிறது தமிழ்ப் படத்துல பல காலமாவே இருக்கு.கழுத,அது இருந்துட்டுப் போகட்டும்னு இருந்தாக் கூட,இந்தக் காபி அடிச்சிட்டு படம் வந்த பின்ன இவனுக பண்ணுற அலும்பு இருக்கே..
'இது நானு பல வருசமா மனசுக்குள்ள பூட்டியே வைச்சுருந்த கதை.ரொம்ப வருஷம் செதுக்குனேன்.'(யோகி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.)
'memento பலருக்குப் புரியல.நான் அதை இன்னும் நல்லாக் கொடுத்தேன்.'(memento படம் பார்த்தவங்க இதுக்கு எப்படி சிரிச்சு இருப்பாங்க னு எனக்கு தெரியும்.)

கொடுத்தது சரி,ஒரிஜினல கொடுத்த ஆளுக்கு தெரிய வச்சுக கொடுத்தியா? அது தான் கேள்வி. உங்க வேலைய ஒருத்தன் காபி அடிச்சு நல்ல பேரு வாங்கின நீங்க கோபப்படுவீங்களா,இல்ல 'அட,பரவாயில்லை.புதுசா யோசிச்சு(??) இருக்கானே' அப்டின்னு சொல்வீங்களா?

அப்புறம்,தமிழ் ரசிகர்களுக்கு அவரு இதை தன் மூலமா கொடுத்தாரு அப்டின்னு ஒரு சப்பைக்கட்டு. செம காமெடி.

அண்ணாத்த ஈயடிச்சான் காப்பி பதிவு போட உனக்கு ஒரு Blog. இந்த பொழப்புக்கு.... நல்லா வாயில வருது.
ஆனா ஒண்ணு உன்னோட கேப்மாறி தனத்தீலும்.. உன்னோட நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு. நீ இந்த பதிவ voting காக தான் போட்டிருப்ப.
இந்த மசுரூக்கு மூடிக்கிட்டு ஏதாவது ஃபேமஸ் ஆன ஸைட் ல ". . . . . add banner"
போல ஏதாவது லிங்க் கொடு.

கருந்தேள் (எ) திருட்டுத்தேளுக்கு,

ஈயடிச்சான் காப்பின்னா என்னன்னு தெரியாதவங்க மேலே உள்ள பிரஷாந்தின் ப்ளாக படிச்சு தெரிந்ஞ்சுக்கலாம். காப்பியடிக்கறத பத்தின பதிவே அடுத்தவன பாத்து காப்பியடிக்கிறயே! தலைப்பு கூட காப்பி! கடைசி வரியான, Comments and brickbats welcome!!! கூட விடாம காப்பியடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

இதெல்லாம் எதுக்கு? சும்மா ஒரு பப்ளிசிட்டியா? ஆங்கிலத்துல ப்ளாக் எழுதறவன் இங்கே வரமாட்டன்ற தைரியத்துல இப்படியெல்லாம் காப்பியடிச்சி தமிழ் பதிவர்களுக்கே கெட்ட பெயர் உருவாக்குகறியே!

அடுத்தவன் முதுகைப்பத்தி சொல்றதுக்கு முன்னாடி உன் முகத்தை கண்ணாடியில் பாரு!

அப்புறம்,"உலகப்படம் பார்க்க வாய்ப்பு உள்ளவங்க ரொம்பக் குறைவு.என்னை மாதிரி சாதாரண மக்களுக்கு அவரு இதை புரியுற மாதிரி கொடுத்தார்."

அப்டின்னு சொல்றவங்களுக்கு,'அண்ணே! கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க அண்ணே! நீங்க இப்ப யூஸ் பண்றீங்களே,இதே இன்டர்நெட்,இதை வச்சு ஆயிரம் 'நல்ல' படங்களைப் பார்க்கலாம்.அதை விட்டுட்டு,எனக்கு வாய்ப்பு இல்ல னு சொல்லாதீங்க.உங்களுக்கு இஷ்டம் இல்லாம இருக்கலாம்.அதுக்காக அவரை ஞாயப்படுத்தாதீங்க.'

தப்பு பன்னிட்டேன்..நான் தப்பு பன்னிட்டேன்.. ஒனக்கு IMDB / WIKI எல்லாம் படிச்சி (படிச்சி) எழுதிர அளவுக்கு இல்ல. சும்மா ctrl+c & ctrl+v ஆளுன்னு தெரியாம சொல்லிட்டேன்.

@ Gopi - //அண்ணாத்த ஈயடிச்சான் காப்பி பதிவு போட உனக்கு ஒரு Blog. இந்த பொழப்புக்கு.... நல்லா வாயில வருது.
ஆனா ஒண்ணு உன்னோட கேப்மாறி தனத்தீலும்.. உன்னோட நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு. நீ இந்த பதிவ voting காக தான் போட்டிருப்ப.
இந்த மசுரூக்கு மூடிக்கிட்டு ஏதாவது ஃபேமஸ் ஆன ஸைட் ல ". . . . . add banner"
போல ஏதாவது லிங்க் கொடு

தப்பு பன்னிட்டேன்..நான் தப்பு பன்னிட்டேன்.. ஒனக்கு IMDB / WIKI எல்லாம் படிச்சி (படிச்சி) எழுதிர அளவுக்கு இல்ல. சும்மா ctrl+c & ctrl+v ஆளுன்னு தெரியாம சொல்லிட்டேன்//

;-) ஹாஹ்ஹா... இந்தப் பதிவுல காமெடியே இல்லையேன்னு நினைச்சேன்.. ;-) வாங்க வாங்க.. ;-) நீங்க இங்க எவ்வளவு வேணாலும் ஒளறலாம் ;-) .. கேரி ஆன் ;-).. உங்க கண்டுபுடிப்புக்கு ஆஸ்கரே குடுக்கலாம் ;) .. ஹாஹ்ஹா

@ ஈசீஆர் என்ற அடிமுட்டாளுக்கு..

//கருந்தேள் (எ) திருட்டுத்தேளுக்கு,

ஈயடிச்சான் காப்பின்னா என்னன்னு தெரியாதவங்க மேலே உள்ள பிரஷாந்தின் ப்ளாக படிச்சு தெரிந்ஞ்சுக்கலாம். காப்பியடிக்கறத பத்தின பதிவே அடுத்தவன பாத்து காப்பியடிக்கிறயே! தலைப்பு கூட காப்பி! கடைசி வரியான, Comments and brickbats welcome!!! கூட விடாம காப்பியடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

இதெல்லாம் எதுக்கு? சும்மா ஒரு பப்ளிசிட்டியா? ஆங்கிலத்துல ப்ளாக் எழுதறவன் இங்கே வரமாட்டன்ற தைரியத்துல இப்படியெல்லாம் காப்பியடிச்சி தமிழ் பதிவர்களுக்கே கெட்ட பெயர் உருவாக்குகறியே!

அடுத்தவன் முதுகைப்பத்தி சொல்றதுக்கு முன்னாடி உன் முகத்தை கண்ணாடியில் பாரு//

நீ என்னுடைய பதிவையே படிக்கலன்னு இப்ப தெரியுது.. அதுல தான் ஆங்கில ப்ளாக்குக்கு தெளிவா லின்க் குடுத்துருக்கேனே.. ;-) நானு கமல் இல்ல.. காப்பி அடிச்சிட்டு, பேரு வாங்க ;-) ..

தமிழ்ப் பதிவர்களைப் பத்திப் பேசுற இந்த லூசு, என்ன கிறுக்கி வெசிருக்கு பார்க்கலாம்னு போனா, அங்க ஒன்யும் காணோம் ;-) .. ஒண்ணுமே எழுதாத ஒரு தற்குறிக்கு, இங்க வந்து வாந்தியெடுக்க எந்தத் தகுதியும் இல்ல மாமே ;-) .. பட், நீ எவ்வலவு வேணாலும் ஒளறலாம் இங்க.. காமெடியும் கொஞ்சம் தேவைப்படுது இல்லையா ;-) ஹாஹ்ஹா

நண்பா,
பதிவோடு அப்படியே ஒத்துப்போகிறேன்.
இதில் அவர் களவாடிய திரைக்கதையை,திரியை மட்டுமே சொல்லியிருக்கிறீர்கள்,அவர் நடிப்பு பாணியை என்ந்த பதிவில் சொல்லப்போகிறீர்கள்,அதற்கும் ஒரு பதிவு போடுங்கள் நண்பா.

===

தவிர ஹேராமில் கார் மீது கலவரக்காரர்கள் நடன்ந்து போவது காரை அடித்து உடைப்பது அப்படியே 1947 எர்த்ல் வரும்,ஏனைய காட்சிகளும் ஹேராமை பிரதிபலிக்கும். சலாம் பாம்பே பாதிப்பு மகாநதியில் நிறைய இருக்கும்.நல்ல முயற்சி,இணையத்தில் ஏற்கனவே என் நண்பன் கலையரசன் தொகுத்துள்ளான் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஏனைய படங்கள் அதிலில்லை.ஒவ்வொரு ஆறு மாதத்துக்கோ ஒரு வருடத்துக்கோ இப்படி நண்பர்கள் இது போல் அவலத்தை வெளியே கொண்டு வருவதில் தவறேதுமில்லை.

===
இது முக்கியமான பதிவு,பின்னூட்டத்தையும் ஒருவர் தவறவிடக்கூடாது.
http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

ஒரிஜினல் உலகவுட்டும்! உல்டா கோலிவுட்டும்!!
===
தவிர மணிரத்தநம் நாயகன் படத்தில் மும்பை கோர்ட் என்று சொல்லி அண்ணா யுனிவர்சிட்டியை காட்டி ஏமாற்றியுள்ளார்.அது கூட தெரியாமல் அது டைம்ஸ் மேகசினில் 100 படத்துக்குள் ஒன்று.
ஒருவன் சம்பவம் நடன்ந்ததாக சொன்ன இடத்துக்கே சென்று தீஸீஸ் செய்து எடுத்தால் கேனை,அன்ந்த படம் மீடியாக்காரர்களால் புறக்கணிக்கப்படும்.அது தான் சினிமா.

இதை விட இன்ந்தியன் ஐகான் என்னும் அமிதாபின் காப்பியை நோண்டினால் எவ்வளவு கிடைக்கும் என்று பாருங்கள்?
அவர் தயாரித்த படமான உல்லாசம்.அது அப்படியே ராபர்ட் டெநீரோ இயக்கிய ய ப்ரான்க்ஸ் டேல் என்னும் பட்த்தின் கொசுவடிச்சான் காப்பி
http://www.imdb.com/title/tt0106489/

காப்பியயடிக்கிற நீ முட்டாளா? இல்ல எழுதாத நான் முட்டாளா?

அந்த ஆங்கிலப்படங்களையெல்லாம் பார்த்து நீயே கண்டுபுடிச்ச மாதிரி எழுதிட்டு பெரிய புடுங்கியாட்டம், "இக்கட்டுரைக்குப் பெரிதும் உதவிய தளம் – Sen’s Spot. " என்று பொய்யாய் எழுதியிருக்கியே! நான் இந்த தளத்திலிருந்து காப்பியடிச்சுருக்கேன்னு போட வேண்டியது தானே!

"தமிழ்ப் பதிவர்களைப் பத்திப் பேசுற இந்த லூசு, என்ன கிறுக்கி வெசிருக்கு பார்க்கலாம்னு போனா, அங்க ஒன்யும் காணோம் ;-)" கமலைப்பத்தியும் மணியைப்பத்தியும் எழுதுன நீ எத்தன படம் எடுத்திருக்கே? பின்னூட்டம் போடுறவன் எல்லாம் பதிவு எழுதணும்னு சட்டம் இருக்கா என்ன?

நான் என்ன எழுதியிருக்கேன்னு பாக்க போனியா, இல்ல அங்க பேண்டு வைக்கலம்னு போனியா?

லட்டு குடுத்து லவடா வாங்கதடா....

கலக்கிட்டீங்க போங்க...

எனக்கு கமல் சுத்தமா புடிக்காது. நான் ஒரு ரஜினி பக்தன் (வெக்கமே இல்லாம பெருமையா சொல்லுவேன்!!! யார் கேட்டாலும்!) ஆனா கமல் மேல் ஒரு மரியாதை வந்தது கல்லூரி காலங்களில், கொஞ்சம் அறிவு வந்த்தப்புறம் மீண்டும் பார்த்த குணா, நாயகன், தேவர் மகன், மூலம்.... அன்பே சிவம் பார்த்து விட்டு கமல் மேல் ஒரு மிகப்பெரிய மதிப்பு வந்தது....ஆனா இப்போ எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........

படு பாவி, எப்படியெல்லாம் பேட்டி குடுத்தான்...வெக்கம் இல்லாம ஆஸ்காருக்கு வேர படம் அனுப்புனாரே..என்னா தைரியம்...!

@ ஈசீஆர் - ஹாஹ்ஹா... இன்னும் உன்னோட காமெடி அடங்கலையா ;-) .. கமான்.. உங்கிட்ட இருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்குறோம்.. ;-).. ஓ இப்ப புரியுது.. நீ பின்னூட்டம்ன்ற பேர்ல வாந்தி மட்டும் எடுக்குறவன்னு.. ;-) அப்ப சரி...

//நான் என்ன எழுதியிருக்கேன்னு பாக்க போனியா, இல்ல அங்க பேண்டு வைக்கலம்னு போனியா?

லட்டு குடுத்து லவடா வாங்கதடா//

இந்த அற்புதமான வரிகளை ஒரு கல்வெட்டுல எழுதி, பக்கத்துலயே நீயும் உக்காந்துக்க ;-) .. உன்னோட சந்ததிகளுக்கு உதவும் ;-) . . இவ்வளவு எடுக்குறியே வாந்தி... உன்னோட சொந்தப் பேர்ல வந்து கமெண்ட் போட வேண்டியதுதானே.. ;-) ஓடி ஒளிஞ்சிக்கத் தெரியுதுல்ல ஈசீஆர்ன்ற பேர்ல.. லவடா குடுக்குற அந்த மூஞ்சிய கொஞ்சம் காமி.. லவடா மாதிரியே இருக்கும்னு நினைக்குறேன் ;-) ஹாஹ்ஹா..

@இ.சி.ஆர்: நான் என்ன எழுதியிருக்கேன்னு பாக்க போனியா, இல்ல அங்க பேண்டு வைக்கலம்னு போனியா?

இல்ல தல, அங்க ஏதாவது அட்டய போடலாமான்னு போயிருக்கும். வேற என்ன?

ஹாஹ்ஹா... இது ஒலக காமெடி.. ;-)

//@இ.சி.ஆர்: நான் என்ன எழுதியிருக்கேன்னு பாக்க போனியா, இல்ல அங்க பேண்டு வைக்கலம்னு போனியா?

இல்ல தல, அங்க ஏதாவது அட்டய போடலாமான்னு போயிருக்கும். வேற என்ன//

ஒரு எழுத்தும் எழுதாத ஒரு வெட்டியான ப்ளாக்ல காப்பி வேற அடிக்கணுமா ?;-) ரெண்டுபேரும் பிரமாதமா வாந்தியெடுக்குறானுங்க ;-) .. கண்டின்ன்யூ ;-) .. செம காமெடி.. ;-)

என்னோட போன கருத்தை என் தல எடுத்திட்ட, ரொம்ப குத்துதோ? இல்ல உங்க கூட்டு காளவானி தானம் தெரிஞ்சி போச்சோ?
அப்பறம் ஹாஹ்ஹா.. எத்தன முற ctrl+c ctrl+v செஞ்சிறுக்க பாரு.

கமெண்ட்ட கூட சொந்தமா எழுதாம சினிமா வசனத்த காப்பியடிக்கிறியே உனக்கு எல்லாம் என் முகத்த இல்ல...ஸூ...கூட காமிக்க மாட்டேன்.

நன்றி கோபி!

நான் கமல் ரசிகன். ரஜினி படமும் பார்ப்பேன்.

ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்தது சுமார் 3 வருடங்களுக்கு முன்பு.

காட்ஃபாதர், நாயகன் காப்பி என்றதில் பெரிய வருத்தம் இல்லை. ஆனால் காட்ஃபாதர் படத்தைப் பார்த்த போது, அல் பேசி னோவின் மேனரிசம் முதற்கொண்டு, கமல் காப்பி அடித்ததைக் கண்டு வருத்தமடைந்தவன். அதனால் மனம் தாங்காமல் உடனடியாக இந்தப் பதிவை எழுதினேன்.

http://pinnokki.blogspot.com/2009/12/blog-post_24.html

யோகி என்ற படத்தை, காப்பி அடித்ததால் கிழித்துக் காயப் போட்டோம். ஜக்குபாயும் அதே. அப்படி, கமல் காப்பி அடித்தால் (அடித்ததால்) இன்றைய இண்டர்நெட் யுகத்தில் கண்டிப்பாக கண்டனங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனை துணிந்து செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

அதற்காக அடுத்த கமல் படத்தைப் பார்க்காமல் இருக்க மாட்டேன் :). ஆனால் ஆஸ்கர் அவார்ட் குடுக்கலைன்னு அழுவறதை நிறுத்திப்பேன் :).

குணா படத்தை மெய்மறந்து பார்த்து ரசித்தவன் :(. அதன் ஒரிஜினலைப் பார்த்து, கதை அப்படியே இருந்தால் கூட பொறுத்துக்கொள்வேன். அந்த மேனரிசங்களை காப்பி அடித்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்... பார்க்கவேண்டும் :(. அப்படி மேனரிசங்களையும் காப்பி அடித்திருந்தால்........

//அவர் மேல் ஒருவித அசூயை ஏற்பட்டுவிட்டது.//
உங்கள் கட்டுரை சிறப்பாக உள்ளது. ஆனால் நீங்கள் கையாண்டுள்ள சில தமிழ் சொற்கள் தவறான கருத்துக்களைக் கொண்டுள்ளது என்பது என் கருத்து. உதாரணமாக அசூயை என்ற சொல்லுக்கு பொறாமை என்பது பொருள். கமலின் திறமையை பாராட்டுபவர்களுக்கு தான் அவர் மீது, அவர் நடிப்பு மீது பொறாமை வரும். நமக்கு கடுப்பு தான் வரும். கதைகளை,கருத்துகளை திருடுவது திருடுபவரின் குற்றமல்ல திருடத் தூண்டும் கருத்துக்களின் ஆழத்தின் குற்றம் என்று எங்கோ படித்த ஞாபகம். ஆனால் அந்த கருத்திற்கு நான் தான் தந்தை என சொலவது தான் நமக்கு கடுப்ப கிளப்புது. கமல் சார்.. அடுத்தவன் புள்ளைங்களுக்கு ஏன் உங்க இனிசியல வக்கிறீங்க. கருந்தேள் உங்கள் பணி தொடரட்டும்.

super appu!!! nobody believed me when I said he is copying from english movies. But now I can prove from your blog.

One more important thing. Tamil Cinemavaku ippadi fans irukara varaiku atha yaaralum asaika mudiyathu.

சரியான கட்டுரை. இப்போ சமீபத்துல கூட சிம்ரனோட கூத்தடிக்கனுனே ரெண்டு படம் எடுத்தாரு. சீரியஸ் படங்கள்ல கூட கமல் நடிக்கும் போது, கேரக்டரவிட கமல்தான் தெரியுறாரு, அதுல அவருக்கு பெருமை வேற, இப்ப்டி நடிச்சே கமல் கெடுத்த படங்கள்தான் அதிகம். ஹிந்தியில் வந்த முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்த தமிழ்ல வசூல்ராஜ எம்பிபிஎஸ்னு எடுத்து குப்பையாக்குனாரு!..
ஆழ்வார்பேட்டை ஆண்டவா......தாங்கமுடியலடா சாமி!

போங்கப்பா போங்க போய் உங்க வேலைய பாருங்கள்! ,சினிமாவில் ஈயடிச்சான் காப்பி அடிச்சு எல்லாரும் கோடி, கோடியா சேர்த்து வச்சுட்டாங்க

@பன்னிகுட்டிராம்சாமி
//ஆழ்வார்பேட்டை ஆண்டவா......தாங்கமுடியலடா சாமி!//
வெல்செட். நான் சொல்லனும்னு நினைச்சேன்.பெரிய பிம்பமாக மனதில் பதிய நினைக்கிறார்.
யவெட்னெஸ்டேவில் கூட நஸ்ரூதின் ஷா தெரியமாட்டார்,ஒரு காமன்மேன் தான் தெரிவார்.ஆனால் இங்கே?கமல் தான் தெரிவார்.இதெல்லாம் சொன்னால் பொல்லாப்பு.மன்மதன் அம்பு எது பற்றியது என யாருக்காவது தெரியுமா?

@கிங் விஸ்வா
நண்பரே,எஃப் எம் ஸ்டேஷனில் கமல் பேட்டியின் போது என்ன நடன்ந்தது ? என ஒரு பதிவை போடுங்கள்.ஆவலுடன் வெயிட்டிங்க்.

கமலஹாசன் என்கிற களிமண்

@ பின்னோக்கி - உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால், நீங்கள் கமலின் ரசிகர் என்று தெரிகிறது. ஆனாலும் உங்களது unbiased கருத்தை வரவேற்கிறேன். குணாவின் ஒரிஜினலைப் பாருங்கள்.. பார்த்துவிட்டு வாருங்கள்.. உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.. அப்படியே, உங்கள் ஸ்டைலில் ஒரு பதிவும் போடுங்கள்..

@ rasikan - னீங்கள் சொன்னது சரி. அசூயை என்ற வார்த்தை தவறு. கோபம், கடுப்பு என்பவைதான் வந்திருக்க வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

@ ShaggyLad - உங்களுக்கு விடியோ ஆதாரங்களும் வேண்டும் என்றால், நான் மேலே பின்குறிப்பில் குறிப்பிட்டுள்ள ஆங்கில ஒரிஜினல் சைட்டைப் பார்த்துவிடுங்கள். அதில் பல வீடியோக்கள் உள்ளன. பின்னூட்டங்களைப் பார்த்தால் தெரியும்.

@ பன்னிக்குட்டி ராம்சாமி - இந்தப் பக்கம் ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்குறமாதிரி தெரியுது ? ;-) வாங்க.. //சீரியஸ் படங்கள்ல கூட கமல் நடிக்கும் போது, கேரக்டரவிட கமல்தான் தெரியுறாரு, அதுல அவருக்கு பெருமை வேற, இப்ப்டி நடிச்சே கமல் கெடுத்த படங்கள்தான் அதிகம்.//

இது ரொம்ப உண்மை ! அவருக்கு ஒருவித Narcissism உண்டுன்னு இந்தப் படங்களைப் பார்த்தா எண்ணத் தோணுது.. நன்றி..

@ சரவணக்குமார் - ஹாஹ்ஹா... அது என்னமோ உண்மை. அவங்க எக்கச்சக்கமா சம்பாதிச்சிட்டாங்க.. ஆனா நாம அதைப்பத்தி பேசி மண்டைய உடைச்சிக்கிறோம்.. ;-)

@ கீதப்ரியன் - விஸ்வா சீக்கிரம் பதிவு போட்டா தாவலை ;-) .. போடுவாருன்னு நினைக்கிறேன்..

@ access - எனது கருத்து என்னவெனில், கமல் நடிப்பு எல்லாம் சரிதான்.. ஆனால், இப்படிச் சுடும்போது, அதன் ஒரிஜினல் படத்துக்குக் கிரெடிட் கொடுக்கவேண்டுமல்லவா? தானே உட்கார்ந்து யோசித்ததுபோல் ஒரு பிம்பத்தை ஏன் உருவாக்க வேண்டும் என்பதே எனது கேள்வி.

கமல் ஜேகேவைப் போல் வேடமிட்டது எனக்குத் தெரியும். அது மட்டுமல்லாது, அது கமலின் தந்தையைப் போலவும் இருந்தது. உங்களது விரிவான கருத்துக்கு நன்றி.. இந்த விவாதத்துக்கு இது மேலும் மெருகூட்டுகிறது.

உற்பத்திப் பொறியியலில் முதன்மையானது வார்ப்புகள்.

இரும்பை உருக்கி அச்சில் ஊற்றி விரும்பிய உருவத்தைக் கொண்டு வருகிற யுக்தி. அச்சை எப்படி உருவாக்குவது?

எந்த உருவம் வேண்டுமோ அதை எதிலாவது பதிக்க வேண்டும். அப்படிப் பதிக்கிற போது அந்த உருவத்தின் குழிந்த அச்சு உருவாகிறது. அதில் உருக்கின இரும்பை ஊற்றுகிற போது குவிந்த உருவம் கிடைக்கிறது.

எதிலாவது என்று சொன்னோமே, அது எப்படி இருக்க வேண்டும்?

உருவத்தைப் பதித்த உடன் அப்படியே எடுத்துக் கொண்டு அதே போல பிரதிபலிக்க வேண்டும். அந்தக் குணம் எந்தப் பொருளுக்கு இருக்கிறது?

களிமண்.

களிமண்ணைக் கொஞ்சம் நீர் சேர்த்துப் பிசைந்து கொண்டால், அதில் எந்த உருவத்தை வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதை அச்சாக உபயோகித்தால் அது மாதிரி பல உருவங்களை உற்பத்தி செய்யலாம். மண்ணாலான அச்சை விட அது உருவாக்குகிற இரும்பு உருவங்கள் உறுதியாகவும் நீண்ட நாள் நீடித்திருப்பவையாகவும் இருக்கும்.

டைரக்டர்களின் கற்பனை உருவத்தை மனதில் பதித்து அச்சை உருவாக்கி அதில் இரும்பு வார்ப்பு மாதிரி உறுதியான பாத்திரங்களை உருவாக்குகிற திறமை இருக்கிற கமலஹாசன் களிமண்தானே? எத்தனை எத்தனை வார்ப்படங்களை உருவாக்கினாலும் மறுபடி தண்ணீர் சேர்த்துப் பிசைந்தால் அடுத்த வார்ப்படத்துக்கு களிமண் தயாராகி விடும்.

வார்ப்புகள் அழிந்தாலும் களிமண் அழிவதில்லை.

ஐம்பது வருஷமென்ன, ஐயாயிரம் வருஷமானாலும் களிமண் அதே குணத்தோடு, மென்மேலும் சிறந்த வார்ப்புகளை உருவாக்கவல்லது. தொடரட்டும் புதுப் புது வார்ப்புகள்.

‘சலங்கை ஒலி’ மற்றும் ‘சிப்பிக்குள் முத்து’ படங்களைப் பார்த்த சிவாஜி கணேசன், “நல்லாத்தான் நடிச்சிருக்கே, ஆனா என்னைக்கு நீ தாடி மீசை இல்லாம கிழவன் வேஷம் போடறயோ அன்னிக்குத்தான் உன் நடிப்பை நான் பாராட்டுவேன்” என்றாராம்.

கமலின் உடனடி முயற்சி நாயகன்.

தாடி இல்லாமல், விக் வைக்காமல் அதில் வயதான வேடம் பண்ணி நடிகர் திலகத்துக்குக் காட்டிய போது “நான் ஹீரோவா பண்றப்போ இது மாதிரி கதைகள் வரல்லையெடா!” என்று ஏங்கியதோடு நில்லாமல் “இந்த வருஷமும் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் உனக்குத்தாண்டா” என்றாராம்.

கமலின் அடுத்த முயற்சி தாடி மீசை ரெண்டுமே இல்லாத கிழ வேடம்.

சுஜாதா ரங்கராஜன் கமலிடம் “ஒரு தாத்தாவை ஹீரோவா வெச்சி எடுத்த படம் சக்கைப் போடு போட்டு ஏகப்பட்ட அவார்டுகளை அள்ளியிருக்கிறதே, அப்படி ஒரு படம் பண்ண ஆசை இருக்கா?” என்று காந்தி படத்தை சுட்டிக் காட்டி கேட்டாராம். அதுதான் இந்தியன் படத்தின் விதை.

கமலின் இந்தியன் பட கெட் அப் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை நினைவு படுத்துவதை எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள்?

கமல் உள்பட பலரும் ஜெ.கே யை நாத்திகர் என்று எண்ணியிருக்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு agnostic. ஏறக்குறைய நாத்திகத்திலிருந்து agnosticism க்கு அவர் மாறியிருப்பதை தசாவதாரம் படம் காட்டுகிறது!

@ access - நீங்கதானே அப்பவே gopiன்ற பேர்ல வந்து கமெண்ட் போட்டது? ;-) ஐபில கண்டுபுடிச்சேன்... ;-) சரிதானே

தான் நடிச்ச படத்தையே வேற வேற களத்துல திருப்பி திருப்பி நடிக்கிறதுக்கு வேறு மொழியில் வந்த நல்ல படங்களில் இருந்து தானே ஒரு கதையை உருவாக்கி அதில் திறமையாக நடிப்பது எவ்வளவோ மேல் தல .... என்ன பண்ண நீங்கள் பஞ்ச் வசனத்திற்கு அடிமையானவர்கள் ,,,
அதனால் இவரின் திறமை புரிவதில்லை உங்களுக்கு

//மற்ற நடிகர்கள் எல்லாம் அவர்களது மசாலாக்களையே அரைக்கும் வேளையில் இது தேவலாம் தானே..

repeettu

வேற்றுமொழியில் வெளிவரும் அட்டு படங்களை அப்படியே காப்பி அடித்து (அன்றைய பில்லாவில் இருந்து இன்றைய தில்லாலங்கடி வரை) அரைத்த மாவையே அரைப்பதை விட வேறு வேறு தளங்களில் பயணப்படுவது எவ்வளவோ மேல் தல ...

சொந்தமா சரோஜாதேவி டைப் மஞ்சள் புத்தகம் எழுதுவதை விட, வேற்று மொழியில் வந்த நல்ல நாவல்களை தமிழ் நாட்டின் கலாச்சாரம் கலந்து கொடுப்பது எவ்வளவோ மேல் ... அது போலதான் இதுவும்

இவ்வளவு நல்லா எழுதுற நீங்க, அசிங்கமா வேற பேர்லயெல்லாம் வந்து ஏன் உங்க மனசின் கழிவுகளையெல்லாம் இங்க காட்டுறீங்க? யார் எங்கிருந்து கமெண்ட்டு போட்டாங்கன்னு ஐபி ஈஸியா காட்டிருச்சி ;-) .. இனி இப்படி கோபின்ற பேர்ல வந்து ஒளறமாட்டீங்கன்னு நினைக்கிறேன்..

@ ராஜா - என்னுடைய வாதம் ரொம்ப எளிமையானது. காப்பி அடிக்கிறீர்களே.. அதனை, டைட்டிலில் சொல்லிவிட்டுச் செய்தால் என்ன? இவ்வளவுதான் என் கேள்வி. இன்னொருவரின் முழுச்சரக்கையும் தனது சரக்காக விளம்பரப்படுத்தி, இண்டர்வியூக்கள் கொடுத்து, உதார் விட்டு... இது ஏன்? ஏன் இந்த அறிவுஜீவி நாடகம்? உங்கள் படத்தை வேறு ஒருவர் இப்படிக் காப்பியடித்தால் மட்டும் கேஸ் போடுகிறீர்களே (காதலா காதலா ஹிந்திப் பதிப்பு மேல் தேனப்பன் கேஸ் போட்டார்).. அப்போது நீங்கள் அடிக்கும் இந்த ஈயடிச்சான் காப்பி மீது ஒரிஜினல் படமெடுத்தவர்கள் கேஸ் போட்டால்?

அவ்வளவே எனது வாதம். மட்டுமில்லாமல், நான் பஞ்ச் வசனத்துக்கு அடிமையானவன் என்று உங்களுக்கு யார் சொன்னது? எனக்குத் தமிழில் பிடித்த நடிகர் யாருமில்லை நண்பரே.. என் கோபம் என்னவெனில், கமல், தான் ஒரு பெர்ரிய அறிவுஜீவி போல் காட்டிக்கொள்கிறாரல்லவா? ஆனால், அவரது சமுதாயப் புரிதல், மிக மிக அசிங்கமானது. அவர் ஒரு முஸ்லிம் எதிர்ப்பாளர். . உண்மையில் இபடி இருந்துவிட்டு, ஏன் பெரிய புரட்சியாளர் போல் நடிக்க வேண்டும் என்பதுதான்....

சபாஸ் சரியான போட்டி !!!!!!!!!!!!!!

சபாஷ் சரியான போட்டி !!!!!!!!!!!!!!

ஒரு நல்ல நடிகன்.....நல்ல படைப்பாளிதான்...ஆனால்.இந்த காப்பியடிச்சத சொல்லி இருக்கலாம்....


ஹேராம்.....அதுல இருக்குறது உண்மை...அதுல கமல் இந்துத்துவத்த தூக்கி பிடிச்சத விட...அதோட கோர முகத்த காட்டினதுதான் உண்மை...ஏற்கனவே நடந்ததான் அதுல காட்டி இருப்பாரு...


plagiarism - you can't stop it unless the people truly gives the credit to the owner...but the truth is the ignorance of the fans makes the creator taking this chance to make themselves superior...


சொல்லப்போனா தமிழ் திரையுலமே ஹாலிவுட்ட நம்பித்தான்
இருக்காங்க...சங்கர்...மணி.....இந்த லிஸ்டுல சேராத ஆட்கள விரல் விட்டு எண்ணிடலாம்....

one kind request - what is the exact limit of inspiration and plagiarism(copying)...

My opinion : You can't erase plagiarism in this media world....

Ek Ladka Ek Ladki', a remake of "Overboard" with Neelam playing Goldie Hawn and Salman for Kurt Russell.
• 'Malamaal' is a remake of the movie Brewster's Millions where Naseeruddin Shah plays the role of Richard Pryor.
• 'Mayor Saab' is a remake of the movie Dave where Kamal Hassan does a fairly good job trying to be Kevin Kline.
• "Pyaar ka Saaya" is a copy of "Ghost"
• "Bade Miyan Chote Miyan" is a copy of "Bad Boyz"
• Chachi 420 was a remake of "Mrs. Doubtfire". However, Kamal Hassan did a decent job trying to be Robin Williams.
• Badshah copy of 'Nick of time', plan of killing a minister by her husband.
• Yes Boss Indian remake of "For Love or For Money" with Shahrukh playing Michael J Fox
• Yeh Dillagi (Sabrina) with Kajol cast in the role of Audrey Hepburn
• Zalzala - Starring Dharmendra is a is a remake of Mcanna's Gold.
• Yes Boss - A copy of ' The Concierge', with Shah Rukh playing the role of Michael J. Fox....except for the job description.
• Badshah is a combination of Rush Hour and In a Nick of Time.
• Mann (An Affair to Remember - Aamir Khan playing Cary Grant. This film did'nt bother to change much)

Aitbaar (Dial M for Murder – Raj Babbar plays Ray Milland, Dimple reprises Grace Kelly)
• Zalzala (McKenna’s Gold – Dharmendra playing Gregory Peck !!!)
• Baazigar (Kiss before dying, remade with Shah Rukh reprising the Matt Dillon role)
• Akele Hum Akele Tum (Kramer vs Kramer, remade with Aamir Khan doing a fairly good job of Dustin Hoffman)
• Agni Sakshi (Sleeping with the enemy, with Nana Patekar hamming his way through, and manisha Koirala doing a Julia Roberts)
• Daraar (Sleeping with the enemy, a very close remake, with Arbaaz Khan doing a reasonable job of the psycho husband)
• Do Kaliyan (Parent Trap, with two Neetu Singhs replacing the original Hayley Mills)
• Farz, Mr. Bond, Bond 303 (All cheap attempts at undoing all of 007’s good work)
• China Gate (Seven Samurai murdered by a super-retarded bunch)
• Main Azaad Hoon (Meet John Doe – Amitabh doing a Gary Cooper)
• Ghulam (On the Waterfront – Vikram Bhatt’s slap to Elia Kazan)
• 100 days (Eyes of Laura Mars – with Madhuri Dixit doing Faye Dunaway’s bit)
• Hatya (Witness – Harrison Ford played by Govinda !)
• Criminal (Fugitive – Harrison Ford played by Nagarjuna !!!)

நண்பரே,

உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவரது சுயசரிதையிலாவது எழுதுவாரா என்று காத்திருக்க வேண்டியதுதான்.

நிறைய விடயங்களை தெரிந்து கொள்ளும் முன்பாக பார்த்த நாயகன், அன்பே சிவம், குணா, இந்திரன் சந்திரன் போன்ற படங்களை நான் ரசித்தேன் என்பதை என்னால் மறுக்கவியலாது. தற்போதுதான் படம் வெளியாகும் முன் அது என்ன படத்தின் தழுவல் என்பதை நண்பர்கள் போட்டு உடைத்து விடுகிறார்களே.

Sauda (Indecent proposal – Robert Redford's consummate nightmare - a remake with Sumeet Saigal)
• Chori Chori (It happened one night – Raj Kapoor and Nargis doing Gable and Colbert)
• Dil Hai Ke Maanta Nahin (It happened one night – Mahesh Bhatt’s attempt at emulating Capra)
• Ek Ruka Hua Faisla (12 Angry Men, redone reasonably with KK Raina playing Henry Ford)
• Raffoo Chakkar (Some like it hot with Paintal playing Jack Lemmon!)
• Ram Shastra (Hard to Kill with Jackie Shroff matching Steven Seagal’s histrionic ineptitude)
• Chachi 420 (Mrs Doubtfire – better make-up, but poor everything else)
• Pyar to hona hi tha (French Kiss – with a pathetic Ajay Devgan attempt at Kline)
• Man Pasand (Pygmalion with superham Dev Anand as Higgins, Tina Munim as Eliza)
• Lakhon wali baat (Fortune Cookie remade with Basu Chatterjee trying to be Billy Wilder)
• Satte Pe Satta (Seven Brides for Seven Brothers remade with Amitabh Bachchan)
• Andar Bahar (48 hrs, with Anil Kapoor making a pathetic attempt at being Eddie Murphy)
• Khalnayika (Hand that rocks the cradle redone with Anu Agarwal)
• Pehla Pehla Pyar (Roman Holiday ripoff with disproportionate Rishi Kapoor as Gregory Peck)
• Insaaf ka tarazu (Hemingway sisters' Lipstick redone with Zeenat Aman)
• Parichay (Sound of Music with Jeetendra playing Julie Andrews !!!!)
• Fareb (Unlawful Entry with Suman Ranganathan turning Indian Ray Liotta, Milind Gunaji's rocker's wild)

கருந்தேள், நீங்க இங்கே குறிப்பிட்ட படங்களையெல்லாம் நான் பார்த்ததில்லை. அவர் உலக சினிமாக்களை காப்பி அடித்திருக்கலாம். ஆனால் இதன் மூலம் கமலின் உழைப்பை நாம் சந்தேகிக்க முடியாது.

உதாரணத்திற்கு வெட்னெஸ்டே, ஒரு வெற்றி பெற்ற படத்தை அச்சு பிசகாமல் அப்படியே தந்திருக்காலாம், மிகவும் மெனக்கெட வேண்டியதில்லை.
ஆனால், கமல் தயாரித்த உன்னைப் போல் ஒருவனில் வரும் வசனங்கள் என்னைப்பொருத்தவரை மிகவும் கூர்மையானவை. இதன் பின்னால் அவர் வசனகர்த்தாவுடன் செய்த உழைப்பு புலப்பட்டது. ஹிந்தி வெட்னெஸ்டே படமானது கமல் உழைப்பின் மூலம் மேலும் மெருகேரியது என்றே சொல்வேன்.

வெட்னெஸ்டே படத்தை அவர் தயாரித்தது வணிக ரீதியாக என்று சொல்வதை விட, அந்த படத்தின் கருத்துகள் கடைகோடி தமிழர்களுக்கு சென்று சேர வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அது போல், தொப்புளில் பம்பரம் விடவும், ஒரு குத்தில் பத்து பேரை சாய்கத்தல் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டும் தமிழ் இயக்குனர்கள் மத்தியில், (இனையம் இல்லாத காலத்தில் இருந்தே) உலக சினிமாவை தமிழர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து...

Access said :
மேட்டர இப்படி கொட்டுருங்களே! நீங்க profile-வோட comments எலுதுங்கள்.
நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்.

கமல் காப்பி அடித்தார் என்பதை ஆதாரங்களுடன் வெளியிட, அடுத்தவர் எழுதிய பக்கத்தைதான் பதிவரும் காப்பி அடித்து எழுதியிருக்கிறார். "கமல்ஹாஸனின் முக்கியப் படங்கள் என்று அழைக்கப்பட்டு வரும் படங்கள் எல்லாமே, ஆங்கில மற்றும் உலகப் படங்களின் ஈயடிச்சாங்காப்பி என்பது எனது வாதம்." --- அடுத்தவர் வாதத்தை உங்களுது வாதம்னு சொல்றது யாரோ பெத்த பிள்ளைக்கு நான்தான் அப்பா அப்படின்னு சொல்வதுபோல் உள்ளது. மத்தபடி பதிவில் சொல்லப்பட்ட கருத்துகளை முற்றிலுமாக ஒத்துக் கொள்கிறேன்

நம் 'ஹாலிவுட்' டின் (வருங்கால) முதல் தமிழ் இயக்குனர் (கருத்து உபயம் தத்துவஞானி ரஜினி அவர்கள்) திரு ஷங்கர் அவர்கள் சுஜாதாவின் உதவியோடு ஆரமபித்த கதை தான் ரோபோ. முதலில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டு , பின்பு ஷாருக் கான், அஜீத் வரை போய் பின்பு ரஜினியிடம் முடிவடைந்தது(!) ஷங்கரின் தேடல். இந்தியனில் 'அக்கடான்னு நாங்க ஒட போட்டா' என்ற பெண் விடுதலைக்கான சிறந்த பாடல் நினைவிருக்கும். அதில் கமல் ஒரு ரோபோ நாயை கட்டி கூட்டி வருவார். அதில் இருந்து தான் ஷங்கருக்கு இந்த ரோபோ மேல் ஒரு 'இது' வந்திருக்கும் என்பது என் அபிமானம்

கமல் காப்பி அடித்த ஆங்கில படங்கள் நான் காப்பி அடிக்கவில்லை நண்பரே தகவல் பகிர்ந்து கொண்டேன்

HE copied more movies like this.. but these kamal fans wont accept that.

leave this hollywood movies.. For wednesday(unnai pol oruvan) itself.. he gave interview in TV as his own story and creation.

but apart from that, he is a gud actor. Bad director/story teller.

அன்பே சிவம் என்னக்கு மிகவும் பிடித்த படமான போர்றேஸ்ட் கும்ப் இன்ப்லுன்சே forrest gump மாதவன் கமல் ரயில்வே ஸ்டேஷன் சீன் அப்படியே காட்சி அல்ல கவிதை

king khan did that forrest gump scene from tom hanks in my name is khan.very subtle.human emotions very subtle.மிகை படுத்தாமல் எடுப்பதில் கமலுக்கு கமல் தான் underplaying characters

ஆங்கில படத்தை விடுங்கள் தமிழ் சினிமா புவனா ஒரு கேள்வி குறி ரஜினி சிவகுமார் நடித்தது மறுபடியும் ரங்கா ரஜினி கார்டே மணி நடித்தது அதே கதை கரு ,இரண்டு நண்பர்கள் நல்லவன் கெட்டவன் ஆகிறான் ,கெட்டவன் நல்லவன் ஆகிறான்,

நண்பர்கள் இப்படி தான் கமல் காப்பி அடிக்கிறார் என்று சொல்லி நான் மிகவும் நொந்து சொன்னது பேசாமல் தெரு கூத்து பண்ண போக வேண்டியது தான் ,கமல் அதை கூட அன்பே சிவமில் விட்டு வைக்கவில்லை

//@ access - நீங்கதானே அப்பவே gopiன்ற பேர்ல வந்து கமெண்ட் போட்டது? ;-) ஐபில கண்டுபுடிச்சேன்... ;-) சரிதானே//

நண்பரே,
தங்கள் அறிவுக்கு இந்த தமிழ் நாடேஅடிமை , நான் access இல்லை. நான் சாதாரண வாசகன். அவர்(access) எவ்வளவு சிறப்பாக அவர் கருத்தை வெளியிடுகிறார்.
ஒரு வேண்டுகோள்:
நீங்கள் Software Quality Analyst ஆனதிர்க்கு networking ல போயிருக்கலாம்.

வணக்கம் கருந்தேள் அவர்களே, என்னை தமிழ்நாட்டின் கடைசி குடிமகனாக வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் சொன்ன ஆங்கில படங்களின் பெயர்களை கூட நான் உங்கள் பதிவைப்பார்த்துத்துதான் தெரிந்திருக்கிறேன். படங்களை அல்ல. உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்கள் தமிழ் சினிமா பார்க்கும் நிலையை தாண்டி விட்டீர்கள். கமல் படம் அல்ல இனி நீங்கள் இந்திய படமே பார்க்க முடியாது ஏனெனில் எல்லாவற்றிலும் காப்பி இருக்கும். ஆனால் நாங்கள் அப்படி அல்ல இன்னும் கமல் படமே புரியாமல் என்னடா படம் எடுக்கீறான் தலையும் புரியல வாலும் புரியலன்னு சொல்லிட்டு இருக்கோம். நாங்க எப்போ உலக சினிமா பார்க்கிரோமோ அப்போ கமலை கிழிப்போம்.. அது வரைக்கு பொருத்துக்கங்க. அதுவரைக்கு நீங்க தமிழ் சினிமா பார்க்காதீங்க.. அதான் உங்களுக்கு நல்லது.

இன்னொரு விஷயம் தெரியுமா அவர் தன்னோட சொந்த தயாரிப்பில் ரொம்ப பணம் செலவு செய்து நடிக்க மாட்டார் எடுதுகாட்டகா கடைசியாக பத்து வேடம் போட்டாரே, தசாவதாரம் தயாரிப்பாளர் கையை கடித்தது அவர்க்கு தான் தெரியும்

it is about media literacy though u belong to different profession u must appreciate other profession too. ஹிந்தி படம் சாஜன் சல்மான் சஞ்சய் தத் நடித்தது அந்த படத்தை பிரபு ரமேஷ் அரவிந்தை வைத்து டூயட் படம் எடுத்தார் பாலசந்தர் உங்களுக்கு எல்லாம் நினைவு இர்ருக்கும் என்று நினைக்கிறன்.same story.same film.

பாரதி ராஜாவின் புதுமை பெண் அப்படியே சொல்ல மறந்த கதை ,அங்கே பெண் இங்கே ஆண் மிகவும் புத்திசாலிதனமான தழுவல் ,உங்களுக்கு புரியும் படி சொன்னால் சந்தோஷ் சுப்ரமணியம் ஹீரோ போச்செச்சிவே பாதர் , அபியும் நானும் அதே கதை ஹெரோஇன் பெண்.possessive father in both films ,one is for son other is for daughter.

french film amelie scene guiding blind man copied in ghajini film asin guiding blind man with description very nice scene நல்ல விஷயம் எங்கே இருந்து வந்தது என்று பார்க்காமல் எப்படி இர்ருக்கு என்று மட்டும் பாருங்கள் ,ஒரு தமிழ் பேசும் நபரை அல்லது தமிழ் மட்டும் தெரிந்த பிடித்த நபரை கோட்பாதர் நோவேல் கொடுத்து படிக்க சொன்னால் கோட்பாதர் இங்கிலீஷ் படம் பார்க்க சொன்ன சொன்னால் முடியுமா ,கமப ராமாயணம் போல தமிழ் சினிமாவிற்கு கமல் செய்யும் மிக பெரிய சேவை அதை இழிவு படுத்தாதீர்கள் அதுவும் கமலின் பொன்விழா ,உபகாரம் செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யதீர்கள்,பாரட்ட முடியவில்லை என்றாலும் தூற்றாமல் இருக்கலாம் இல்லையா ,அப்படி கமல் தழுவிய ஆங்கில படம் போல சிறப்பாக இல்லை என்றால் தூற்றலாம்,ஐம்பது ஆண்டு காலம் ஆங்கிலம் தெரியாமல் ஆங்கிலம் படத்தை தழுவாமல் இர்ருந்து இருந்தால் கமல் எபோதோ கலை உலகில் இருந்து விலகி கல்யாண மண்டபம் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் முல்டிப்லெக்ஸ் கட்டி சில்லறை எண்ணி கொண்டு இருப்பார் கமல்

"அவரது சமுதாயப் புரிதல், மிக மிக அசிங்கமானது. அவர் ஒரு முஸ்லிம் எதிர்ப்பாளர். . உண்மையில் இபடி இருந்துவிட்டு, ஏன் பெரிய புரட்சியாளர் போல் நடிக்க வேண்டும் என்பதுதான்...."

கண்டிப்பாக கருந்தேள்,
நேற்று இரவே இதனை பின்னுட்டத்தில் எழுதி உங்களினுடைய பதிவின் நோக்கம் பாதிக்கபடும் என்று கருதி பிறகு அழித்து விட்டேன்,

"உன்னை போல் ஒருவனில்" ஒரு வசனம் வரும் "இன்ஷா அல்லாவா" என்று அவர் மனைவி கேட்பதாக அந்த வசனம் வரும் போது திரைஅரங்கில் பலத்த சிரிப்பொலி எழுந்ததது அடங்க வெகுநேரம் ஆகிற்று,
இன்னோரு காட்சியில் "அதான் இரண்டாவது பொண்டாட்டி இருக்குல்ல" அப்படி என்று மறு படியும் அந்த சிரிப்பொலி அடங்க வெகு நேரம் ஆகிற்று,

அந்த ஒரு நிமிடம் அந்த திரைஅரங்கில் சிரித்த அவர்களின் உள் உறங்கும் விலங்கு வெளிப்பட்டு மறைத்து,
அந்த ஒட்டு மொத்த மிருகங்களின் ஒரு உருவமாகதான் அந்த நொடி கமல் தெரிந்தார்,
இது போலதான் அவரின் சமுதாய புரிதல் மிகவும் கீழ்தரமாக அவரின் பல படங்களில் வெளிப்படும்,

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan.....:)

"Some Times Something Is Better Than Nothing But Always Nothing Is Better Than Some Stupid Things"

பாடல் காட்சிகளே இல்லாமல் எடுக்கப்படும் மூன்றாம் தர படங்கள் ஏற்படுத்தும் பாதிப்பினை விட தவறான சமுக புரிதலின்னோடு எடுக்கப்படும் படங்கள் விதைக்கும் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

Few scenes in "Vettaiyadu Vilayadu" are lifted from "The Mystic River" (Sean Penn starrer) - the scene where Kamal 'discovers' the mass burial site inside a forest in US.

சமுதாய புரிதல் ஹிந்து மஜோரிட்டி வாழும் நாட்டில் ஒரு தசவதாரம் படத்தில் முக்ஹுந்த முகுந்தா பாடல் போட முடியல தயாரிப்பாளர் எதிர்ப்பு அதையும் மீறி பாடல் பதிவானது ,முஸ்லிம் நண்பர் அதை ரிங் tone பயன் படுத்த தயங்கு கிறார் ,இது தான் சமுதாய் புரிதல்?

ஊனமுற்றோர் என்ற சொல்லே நீக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கும் போது, குருட்டு என்ற வார்த்தையை(2 முறை) உபயோகித்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

This is gud one.
I really appreciate it.
I jst started here.
I ll share my thoughts abt this blog

கமல் உலகப் படம் காபி அடித்தாலும் , உள்ளூர் படம் காபி அடித்தாலும் அவரின் நடிப்பை ஆராதிக்கும் ரசிகன் நான்.

நாளையே கமல் ரிக்ஷா காரன், காதலுக்கு மரியாதை, அங்காடி தெரு போன்ற படங்களை காபி அடித்து நடித்து வெளியிட்டாலும் பார்ப்பதற்கு நான் தயார்.
இதை சொல்வதற்கு எனக்கு எந்த வித வெக்கமும் அவமானமும் இல்லை.

physically challenged differently abled? lean on me copied by kamal as nammavar ,நம்மவர் படம் லியன் ஒன மீ lean on me படம் காப்பி,,மோர்கன் பிறீமன் morgan freeman கேரக்டர் அக்டோர் actor நல்ல நடிப்பு அதை நீங்க பார்த்தாலே தமிழில் எடுக்க நினைப்பீர்கள் ,கமல் அதை செய்து தவறு இல்லையே ,பிறகு சிரஞ்சீவி மெகா மாஸ்டர் என்ற பெயரில் சுரேஷ் கிருஷ்ணா டிறேக்டியன் direction வணிக ரீதியாக வெற்றி ,அதே படம் மலையாளத்தில் லைப் இஸ் பெஆபிபுள் மோகன்லால் நடித்து படம் சரியாக போகல LIFE IS BEAUTIFUL very good film ,malayalam film also flop.

மோகன்லால் படம் லைப் இஸ் பெஔதிபுல் பாசில் டைரெக்டர் ,நீண்ட நாட்களுக்கு பிறகு அடி தடி சண்டை இல்லாமல் ஒரு போவேர்புள் கேரக்டர் வாத்தியார் ,சிறந்த படம் சிறந்த நடிப்பு எல்லாம் இருந்தும் வீண் ,நம்மவர் படம் கூட யாருக்கு பிரோயோசனம் அட நம்ம கரண் அவர்களுக்கு நல்ல ஆரம்பம் தமிழ் படங்களில் பிள்ளையார் சுழி போட்டது

சரி சரி 100 கமென்ட்டு வந்திடிச்சி...எல்லாரும் கலைஞ்சி போங்க...!

குணா படம் தான் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் அவர் சோனியா அகரவலை தூக்கி செல்லும் காட்சிகள்,வணிக ரீதியாக படம் குணா வெற்றி பெறவில்லை ஆனால் கொடைக்கானலில் குணா கவேஸ் caves கமலின் உழைப்பிற்கு பெயர் சொல்லும் இடம்,காதல் கொண்டேன் கூட கொஞ்சம் குணா கொஞ்சம் ராபின் வில்லியம்ஸ் நடித்த குட் வில் ஹன்டிங் பட ஹீரோ கேரக்டர் இன்ப்லுன்சே தனுஷ் கேரக்டர்.loosely based on that character,குட் வில் ஹன்டிங் ,லியன் ஒன மீ வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள் good will hunting ,lean on me.

நீங்க சொல்றத வெச்சு பாத்தா "Sergio leone" கூட உலகின் தலை சிறந்த இயக்குனர் என்ற பட்டத்திற்கு லாயக்கான்வரா என்ற கேள்வி எளும்...

ஏன்னா...அவருடைய முக்கிய படங்கள் குரசேவா வின் படங்களின் கதையைக் கொண்டவை.

குணா, ஹேய் ராம் போன்ற படங்கள் காப்பி என்று சொன்னீஙன்னா..உங்களையும் அரை வேக்காட்டு உலக சினிமா ரசிகர் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

வெற்றி விழா ஒரு நாவலின் தழுவல்..அது தவறு என்றால் உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் பலரும் நாவலைக் கொண்டே எடுத்திருக்கின்றனர்.

சதி லீலாவதி - இந்த படத்தில் கமலின் நடிப்பு ஒன்றே போதும்...அவர் "Genius" ஒரு என்பதை நிரூபிக்க...அந்த சக்திவேல் கவுன்டர் ஒன்றும் காப்பி இல்லயே...ஹிஹி

In cinema its not based on from where it has been prepared - but what the artist brings new to the table and kamal has brought a lot of his own to the table and thats where he signs more than anyone else

தமிழில் அதன் பச்சை மண்வாசனையோடு எந்தவித அயல் தாக்கமோ நகல் எடுத்தலோ இல்லாமல் அக்மார்க் ஒரிஜினல் படத்தை எடுத்தவர் நடித்தவர் அண்ணன் ராமராஜன் அவர்களே.[இவர் படத்தையும் யாரும் காப்பி அடிக்கமுடியாது என்பது குறிப்பிடத் தக்கது] ஆகவே கமல் மாதிரி அந்நிய மோகிகளை புறக்கணித்து ராமராஜன் அவர்கள் படத்தை திரும்ப திரும்ப கண்டு களித்து நமது திரைப்பட ரசனையை மென்மேலும் வளர்த்துக் கொள்வோமாக.

மிக சிறந்த உதாரணம் ஆன்டி நோ ௧ கோவிந்தா ஹிந்தியில் கமல் கூட போட்டியாக அதே நேரத்தில் எடுத்தார் அவ்வை ஷண்முகி ஹிந்தி வடிவம் சாச்சி ௪௨௦ அப்புறம் நம்ம பிரசாந்த் ஆனழகன் எடுத்தார் ,ஓகே கோப்பி அடித்ததில் யாருக்கு வெற்றி ,நம்ம கமலுக்கு தான்,பாவம் கோவிந்தா மற்றும் பிரசாந்த் ,வரலாறு மற்றும் நிகழ் களம் வெற்றியை தான் கொண்டாடும் ,கமலின் வெற்றி சக ப பிரசாந்தை விட கோவிந்தா விட கமலின் படம் சிறப்பானது .சரித்திர சான்று.சோ சரித்திர நாயகன் கமல்.கமலின் நாயகன் ஹிந்தி வடிவமான தாயவன் வினோத் க்ஹன்ன நாயகன் ரீமேக் கிட்ட கூட நெருங்க முடியல .அமிதாப் அவர்கள் ஒரு கைதியின் டயரி ரீமேக் பண்ணினார் ஹிந்தியில் அதற்கு முக்கிய காரணம் கதை இருந்தாலும் கமலின் அந்த கிளைமாக்ஸ் குதிரை மேல சிலை போல இருக்கும் நடிப்பு ,அமிதாபின் படங்கள் ரஜினி அவர்கள் ரீமேக் செய்து உள்ளார் ,அனால் கமல் படம் ஹிந்தியில் அமிதாப் செய்தார்,தேவர் மகன் அணில் கபூர் செய்தார் ,அனால் கமல் போல வரல.அது தான் உண்மை

I think Mahaanadhi has shades of Hardcore (1979) Aboorva Sahodharargal has shades of Corsican brothers(1941). I'm not sure if there are substantial proof videos for this.

aunty no 1 govinda and chachi 420 released at the same time.i mean kamal released ahead of govindas auny no 1,prasanth tried his best in analagan but same story copy neengale sollunga yaar copy adichathil best.creation means hiding your resources.we r dealing with recreation,so we r re creating everything. re creation மறு உற்பத்தி அதில் யார் சிறந்தவர் என்று பார்க்க வேண்டும்,recreation

anpulla karunthel kannayiram-

it is difficult to dismiss kamalahasan that he has been plagorising thro all his carrier. some one can show the evidence that most of the hollywood films are plagorised from any east european or japanese films. for example sliding door was from blind date of kieslowski and magnifiiant seven from seven samurai or tarantino films from godards narratives.

you can question kamal for not admitting his inpiration from hollywood films. that is the fair approach.

in my opinion almost all the tamil directors steal concepts or scenes or camera angles from european or hollywood films including the big ones.

how about film critics? look at charu's criticism on maniratnams guru, a wednes day - please compare his ubsurd criticism of unnai pol oruvan the tamil remake of a wednesday- he apperciate a wednesday as a best anti terrorist film and condemning unnai pol oruvan as hindutuva - kenath thanmaaga irukkirathu. the same charu talking about anti globalisation and plachimada in his one political article and appreciate maniratnams guru as he says he did not know the economics of the film, a film praise the economic ways of reliance group. where is the value here? and see his review on naan kadaval and his u turn afterwards on that movie. you people quote him as a valued critic. i could not understand.

other than that the vicious circle created by esra and jayamohan, the so called literary tamil screen writers. the one who write sindhu sama veli like film is bitterly attacking john abraham. he could not understand the importance of amma ariyan. world film giants appreciate the film with valued reasons. jeyamohan is the bullshit of tamil cinema.

and this esra says balachnadars aval oru thodra kathai is nothhing to do with khataks mega tara tag in his website article, not in any mainstream journal articles. and he even goes on to tell recognise balachander as the great indian direcors, ray and khatak. where is the value based critiism here?

these three writers are the curse of tamil film criticism. biased tamil cinema screen writers approach of films in general.

other wise i learn a lot from ur articles

anpudan yamuna rajendran

நீங்க சொல்வது போல கமல் எந்த இங்கிலீஷ் படத்தில் இருந்து சுட்டேன் என்று டைட்டில் போட்டால் நல்லவர் ,அதற்க்கு தமிழ் சினிமா பட்ஜெட் இடம் கொடுக்குமா ரிக்ஹ்த்ஸ் வாங்க ,எல்ல இசையும் தியாகராஜ கீர்த்தனைகள் மற்றும் மேற்கத்திய இசை பீதொவேன் அல்லது மொசார்ட் அடிப்படை கொண்டது தான் அவர்களுக்கு எந்த மியூசிக் டைரக்டர் கிரெடிட் கொடுகிரரா ,எதுவுமே ஒரிஜினல் கிடையாது எல்ல இல்லகனங்களும் யாரோ நம் முன்னோர்கள் சரிகம பத நி போல பண்ணி வைதுலார்கள் ,ஆகவே கமல் கூட விதி விலக்கு அல்ல .எல்லாரும் ரே ச்ரியடோர்ஸ் தான் recreation business yellaarum re creators thaan ,பீதொவேன் மொசார்ட் பல வருன்டங்கள் உழைத்து தான் இலகனங்களை வகுத்தனர் அதை கூட நாம் சரியாய் பயன் படுத்த சிலருக்கு தான் தெரியும்,நல்ல இசையை ரசிக்க நல்ல ரசனை வேண்டும்,நல்ல கமலின் சினிமாவை ரசிக்க நல்ல ரசனை வேண்டும் ,

வாழ்த்துக்கள் :
உங்கள் சமீபத்திய பதிவில் என் தாணை (கமல் ) தலைவனை பிரித்து மேந்துவிட்டீர்! சந்தோசம்.( தானே?!)
தொடரட்டும் உங்கள் பதிவு. ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி....

ஒரு கேள்வி :
உங்களை போன்று எத்தனை பேரு உலக திரைப்படங்களை பலவும் பார்க்க ரெடியா இருக்காங்க. ?

நான் :
ஒரு சாதாரண ரசிகனாய் அவரை இன்னும் ரசித்து கொண்டிருக்கும் பலரில்... நானும் ஒருவன். அவரது நடிப்பை இன்னும் பலபேருக்கு புரியவில்லை. இப்படி இருக்கும் என்னைபோன்ற மக்களுக்கு நீங்கள் சொல்லும் உலக சினிமா எட்ட தூரமே. அப்படி ஒருவேளை உலக சினிமாவை ரசிக்கும் நிலை என்னை போற்ற சாதாரண ரசிகனுக்கும் கிடைக்குமானால் அன்று கமலை நானும் வெறுப்பேன் உங்களைபோன்றே. அதுவரை...... என்று கமல் நடிப்பை ரசிக்கும் ஒரு சாதாரண ரசிகன்.

முடிவு:
நிறைய திரை துறையை சார்ந்த நண்பர்களுக்கு கமல் ஒரு முன்னுதாரணம், இந்த காப்பி விஷயம் முதற்கொண்டு. பணத்திற்காகவோ / தன் சுய விளம்பரத்திற்காகவோ அவர் இதனை செய்வதாவே இருந்தாலும் பல நாடுகளில் இருக்கும் நல்ல திரைப்பட விசயங்களை அவர் எடுத்துவந்து தருவதை... தரபோவதை ஆதரியுங்கள். விஷயம் எங்கிருந்த வந்தா என்ன சார். ரசியுங்கள்.

தொடர்ந்து இது போன்ற பல திரை முகங்களை கிழித்து எழுதுங்கள்.

//இந்தப் பதிவு ஈயடிச்சான் காப்பி என்ற விஷயத்தை, பின்குறிப்பிலேயே தெளிவாகக் கொடுத்திருக்கிறேனே.. பதிவையே ஒழுங்காகப் படிக்க முடியாத நமக்கு, பெரிய லபக்குதாஸ் போன்ற இந்தப் பின்னூட்டம் எதற்கு?;-) .. காமெடி பண்னாம போயி வேலையைப் பாருங்க.. //

நான் சொல்ல வந்தது என்னன்னா ... அடுத்தவன் பதிவ காப்பி அடிச்சி, காப்பிய பத்தி ஏன் பதிவு போடனுன்னு கேட்டேன். அதுக்கு எதுக்கு லபக்குதாசுன்னு பலரும் யூஸ் பண்ணின வார்த்தையை காப்பி அடிக்குறீங்க? சொந்தமா நாலு வார்த்தையில பதில சொல்லுங்க தல.
என்ன இருந்தாலும் நிறைய மெனக்கெட்டு இருப்பது தெரியுது. கமல திட்டாதீங்க , தல தான் தறுதலைகளுக்கு வழிகாட்டி.

செந்தில்வேலனை அப்படியே காப்பி அடிக்கிறேன்(இங்கயும் காப்பியா-)

தல சினிமாங்கறது வியாபாரம். ரசிகர்களுக்கு தேவை நல்லப்படங்கள். அதில் நல்லப்படங்களை சுட்டுநமக்கு புடிக்கறமாதிரி கொடுக்கறதுல எந்ததப்பும் இல்லயே...

அப்படியாவது நல்லப்படங்களை கொடுங்கடான்னு மற்ற இயக்குனர்களையும் சொன்னா அதையும் பண்ணாம அரைச்சமாவையே அரைக்கிறானுங்களே...இதை என்ன சொல்றது...???

அதிகமான உலகப்படங்களை நீங்க பார்க்கறதுனால அது தெரியுது...உலகப்படம்னா என்னண்ணே தெரியாத கடைகோடி தமிழனக்கு கமலின் படம்தான் உலகப்படமா தெரியுது.... அந்த கடைகோடி தமிழனில் நானும் ஒருத்தன்....:)) நன்றி தல

சுடறதுல தப்பு இல்ல...எந்த படத்தை சுடறோம்...எப்படி பாலிஷ் பண்ணிக் கொடுக்கறோம்ங்றதுதான் முக்கியம்...

வேட்டைக்காரன், குருவி மாதிரிசுட்ட படம் எடுத்தாத்தான் தப்பு :))

அப்புறம் சாருவோட நிகழ மறுத்த அற்புதம்...நானும் முன்னாடியே படிச்சிருக்கேன்... தமிழ்ல உலகப்படம் வரலைங்கறது சாருவோட கவலை...பாவம் அதுக்குப்போய் செத்துபோன சிவாஜி, எம்ஜிஆரை கூட வம்பிழுக்கிழுத்திருப்பாரு... என்னைப்பொறுத்தவரைக்கும் அது ஒரு இத்துப்போன கட்டுரை...

Sakarai illatha ooruku Ilupai poo thaan sakkarai. Naanjil pradaap, you write one story. I will copy your story. Then you know how you feel. Steeling others work is criminals thing. Whether it is welath or art, it is same. Kamal steals others work. Then he should not cry for thirutu DCD.

கருந்தேள்,

அருமையான அலசல். இன்னும் பல படங்களில் சில காட்சிகளை மட்டும் உருவியிருப்பார். மகளிர் மட்டும் படத்தில் வரும் நாகேஷ் செத்த பிணம் காமெடி "WEEKEND WITH BERNEY" படத்தின் வருவது.

ரஜினியின் அருணாசலம் படம் "millions" படத்தின் காப்பி. அந்த படத்தில் 30 மில்லியன் டாலர், அருணாசலத்தில் 30 கோடி ருபாய்.

^ 'Millions' is a 2004 film. 'Arunachalam' is a 1997 film. And there are no similarities between the two films whatsoever.

sathyama...... you made my day....... i ll sleep peacefully tonight

எங்கே தமிழ் சினிமா ,MGR FILMS MOSTLY ROBINHOOD FILMS,jai shankar films cow boy films n james bond films, rajini style all credit goes to cow boy films n satruhan sinha hindi star,kamal english films pola eduthaal ungallukku porukkala

survival theory beg or borrow or steal,steal ideas to survive.அதற்கு யாருமே விதி விலக்கு இல்லை,

உலக நாயகன பிரிச்சு மேய்ந்து விட்டாயே தலைவா... இனி அவர் உலக நாயகனா? இதுல ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றவுடன் அது அமெரிக்கர்களால் அமெரிக்கர்களுக்கு தரப்படுவது என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார்...

இந்த ரெண்டு படமும் இந்தந்த படத்தின் காப்பி தானான்னு சொல்லுங்க...

Green Card (1990, Andie McDowell, Gerard Depardieu) – NALA DHAMAYANDHI

Memories of Murder (Korean Movie) – VETTAIYADU VILAIYADU

Green Card (1990) Release Date:
11 January 1991 ,Michael Madhana Kamarajan is a 1990 film imdb source
A M ரத்தினம் தயாரிப்பில் லண்டனில் காமேஸ்வரன் என்ற பெயரில் கமல் எடுபதாக இருந்த படம் பின்னர் நல தமயந்தி ஆனது ,அதாவது கிரீன் கார்டு மைகேல் மதன காமராஜன் ரிலீஸ் ட்டே பார்க்கவும் ,லண்டனில் காமேஸ்வரன் மைக்கல் மதன காமராஜன் பாகம் இரண்டு ,பின்னர் மாதவன் நடிக்க வெளியானது ,ஹிந்தியிலும் ராம்ஜி லோண்டோன்வலே என்ற பெயரில் ரிலீஸ் ஆனது ,நீங்கள் சொன்ன கொரியன் படம் என்னக்கு தெரியாது கொலைகாரன் கிரிம் ஸ்டோரி எனக்கு உடன் படு கிடையாது .all said and done kamal has three successive hits all his previous releases recovered their cost,whereas rajini kuselan official flop

மணிசித்திரதாலு சந்திரமுகியாகி கேரளாவிலேயே 100 நாட்களுக்கு மேல் ... சிறந்த பாப்புலர் படமாக தமிழ் படம்,மலையாள படத்தை தமிழ் ரீமேக் செய்து கொஞ்சம் கூட அவமானம் இல்லாமல் வெறும் கோடிகள் கிடைபதர்காக எதையும் செய்யலாம் ,தமிழ் படங்கள் மலையாளத்தில் சக்கை போடு போடும் போது கத பறையும் போல் ரீமேக் படு தோல்வி ,சந்திரமுகியில் மாட்ட வேண்டியது,குசேலனில் மாட்டி கொண்டது தமிழ் சினிமாவின் மானம்,ஒரு தமிழ் சினிமா ரசிகனாக மிக பெரிய அவமானம் ,மணிசித்திர தாழ் காபி அடித்து திருப்பதிக்கே லட்டு கொடுத்தது ,ஒரு சாதாரண ஸ்ரீனிவாசன் படம் கத பறையும் போழ் வெற்றி ஆபீசியால் ரீமேக் குசேலன் கொடுக்கலையே .கமல் ஒன்றும் ஆங்கில படத்தை எடுத்து ஆங்கிலேஎர்களுக்கே கொடுக்கலையே சந்திராமுக்ஹி போல ,லைப் இஸ் பெஆபிபுள் பெஸ்ட் பிலிம் ஆஸ்கார் வாங்கினாலும் அது சார்லி சாப்ளின் படம் போல தான் இருந்தது என்பதை கருந்தேள் உலக சினிமா மேதைகளுக்கு நினையு ஊட்ட விரும்புகிறேன் ,காபி அடித்தால் அவரது padam மறுக்க படவில்லை ,கமல் படம் பெஸ்ட் போறேய்க்ன் foreign பிலிம் category தான் நோமினடே nominate ஆகும் ,

அன்பின் கருந்தேள்,

என்னத்த சொல்ல...சீக்கிரமே ஒரு எதிர்வினை ஆத்திர வேண்டிதான். மண்டபத்துல சொல்லியிருக்கேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன். கமல வம்பிழுக்கிறதே இவிங்களுக்கு வேலையாப் போச்சு.(இவிங்க= கருந்தேள் + கருந்தேள் குரு சாரு!! )

குசேலனின் மாபெரும் வெற்றியால் கமலுக்கு ஒரு வருடம் லே ஆப் pyramid sai mira பிரமிட் சிமிர காங்ற்றச்ட் காசு என்ன நேரம் இல்லாதால் கமல் படம் மர்மயோகி ட்ரோப் ஆனது ரஹ்மான் ஸ்ரேயா எல்லாருக்கும் அட்வான்ஸ் கொடுத்து ட்ராப் ஆனது.தமிழுக்கு இன்னும் ஒரு காபி படம் கிடைத்து இருக்கும் ,தமிழ் சினிமா கொடுத்து வைக்கவில்லை ,one more copy braveheart lookalike film tamil filmdom missed.

Roberto Benigni's La Vita é Bella
(Life is Beautiful) happens to be the most popular Holocaust comedy It is complete
with Benigni's trademark Chaplinesque style; the film is awfully
simplistic about a catastrophe as great as the Jewish Holocaust.Benigni simply turns the entire event into "a game" to save his little
son the shock of the situation. While his intentions of showing that
human love and a sense of humour can conquer Hitler are good - as
overwhelmed viewers will tell you - the film is too removed from
Holocaust reality. I can't help wonder whether Benigni was trying to
copy his idol Charlie Chaplin yet again

எப்படி மிஸ் பண்ணினார் நம்ம உலக நாயகன் life is beautiful copy panna.சாப்ளின் செல்லப்பா அவர் அபூர்வ சகோதரர்கள் பண்ணிய குள்ளன் உருவம் சிறுமியை மகிழ்விக்க குள்ளனாக மாறி காட்டுவார் புன்னகை மன்னனில் தயவு செய்து யாரவது கமல் குள்ளனாக மாறுவதற்கு எந்த ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டார் என்று சொல்லவும் பல வருடங்களாக தேடியும் கிடைக்க வில்லை

//bogan said...
தமிழில் அதன் பச்சை மண்வாசனையோடு எந்தவித அயல் தாக்கமோ நகல் எடுத்தலோ இல்லாமல் அக்மார்க் ஒரிஜினல் படத்தை எடுத்தவர் நடித்தவர் அண்ணன் ராமராஜன் அவர்களே.[இவர் படத்தையும் யாரும் காப்பி அடிக்கமுடியாது என்பது குறிப்பிடத் தக்கது] ஆகவே கமல் மாதிரி அந்நிய மோகிகளை புறக்கணித்து ராமராஜன் அவர்கள் படத்தை திரும்ப திரும்ப கண்டு களித்து நமது திரைப்பட ரசனையை மென்மேலும் வளர்த்துக் கொள்வோமாக//
:)

Superabu!!

கருந்தேள்,நேரம் இருப்பின் கமலைப் பற்றிய‌ என்னுடைய‌ இந்தப்பதிவை படிக்கவும்!